கோவை, மார்ச் 13- கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் உள்ள காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் தெரி வித்துள்ளனர். அதிகரித்துவரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற் பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற் பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற் றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ள தாக தொழில்துறையினர் தெரிவித் துள்ளனர். இந்திய காற்றாலை மின் உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங் கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப் படையில் தான் மொத்த மின்உற்பத்தி கணக் கிடப்படுவது வழக்கம். கடந்த 2021-22 நிதி யாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றா லைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன. 2022-23ஆம் நிதியாண்டிலும் தமிழ் நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லி யன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின் சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத் தக்கது என்றார்.