அர்ஜுன் சம்பத் உட்பட 20 பேர் கைது
கோவை, நவ.17- காவல் துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம் பத் உட்பட 20க்கும் மேற்பட்டோரை காவல் துறை யினர் கைது செய்தனர். ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளி யிட்டு வரும் ஊடகவியலாளரின் நாக்கை அறுப்பதா கக்கூறிய, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலை யில், ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதைக் கண் டித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், ஞாயிறன்று போலீசா ரின் அனுமதியின்றி, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும், பேரணியாக செல்வதற் கும் அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். இதைத்தொ டர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்ட நிலையில், அர்ஜுன் சம்பத் உட்பட 20க்கும் மேற் பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாநில அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: அசத்திய வீரர்கள்!
சேலம், நவ.17- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ் டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேசன் சார் பில், மாநில அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி, சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. ஆண் கள் பிரிவில் 40 முதல் 80 வயதுடையவர்களும், பெண்கள் பிரிவில் 40 முதல் 60 வயதுடையவர்களும் கலந்து கொண்டனர். மதுரை, சென்னை, கோவை, சேலம் உள் ளிட்ட மாநிலம் முழுவதிலிருந்தும் எண்ணற்ற டேபிள் டென்னிஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட னர். 80 வயது வரை உள்ள முதியவர்கள் பங்கேற்று விளையாடிய இப்போட்டி அங்கிருந்த சிறுவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இப்போட்டியில் தேர்ந் தெடுக்கப்படுபவர்கள் அகில இந்திய போட்டிகளில் பங் கேற்க உள்ளனர்.
விபத்து ஏற்படுவதை தடுக்க பேரி கார்டு அமைக்க கோரிக்கை
தருமபுரி, நவ.17- பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, காவல்துறை தடுப்பு (பேரி கார்டு) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகருக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள், நாள்தோறும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்துக்கு செல்வதற்கும், பாலக்கோடு நக ரம் பிரதானமாக மையமாக உள்ளது. இதனால் வாக னங்கள் எண்ணிக்கை அதிகரித்து, பாலக்கோடு புறவழிச் சாலை பிரிவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இப்பகுதி ஆய்வு மேற்கொண்ட வட் டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், இப்பகு தியை விபத்து பகுதியாக அறிவித்து, ஆங்காங்கே தடுப் புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் அமைத்து வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் தற்போது வரை இப்பகுதி யில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தற்போது அனைத்து பேரி கார்டுகளும் என்ன ஆனது என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர். காவல் நிலைய பாதுகாப்பிற்கு வைக்கப் பட்டுள்ளதால் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களின் உயிருடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தடுப்பு பேரி கார்டு அமைத்து விபத்து நடக்காமல், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டை வரவேற்க 2025 கிலோ கேக்!
கோவை, நவ.17- புத்தாண்டை வரவேற்க 2025 கிலோ கேக் தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் பங் கேற்றனர். பொதுமக்களை கவரும் வகையில் இனிப்பகங்களில் பல்வேறு விதமாக கேக் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம், பொள் ளாச்சி - உடுமலை சாலையிலுள்ள பிரபல மான அமுதசுரபி பேக்கரி ஊழியர்கள், மக்க ளுடன் இணைந்து புத்தாண்டை வரவேற் கும் வகையில், 2025 கிலோ எடை உள்ள பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேக்கரி ஊழி யர்கள் கூறுகையில், 750 கிலோ முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, செர்ரி பழம் உள் ளிட்ட 15 வகையான நட்ஸ் பொருட்கள் மற் றும் ஒயின் போன்ற பழச்சாறுகளை பயன்ப டுத்தி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2025 கிலோ கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். டிச.15 ஆம் தேதியன்று கேக் தயாரிப்பு பணி முழுமை பெற்று பொதுமக்களுக்கு விற் பனை செய்யப்படும், என்றனர்.
இன்று பாத்திரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், நவ.17- பாத்திரத் தொழிலை இருளுக்குள் தள் ளும் மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப் பூரில் திங்களன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதென, சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பனியன் தொழிலுக்கு உலகப் புகழ்பெற்ற திருப்பூரில், நூற்றாண்டு பழமையான பாத்தி ரத் தொழிலும் இந்தியா முழுவதும் புகழ் பெற்றுள்ளது. திருப்பூரில் வடக்கு பகுதிக் குட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப் பாளையம், திலகர் நகர், பள்ளிபாளையம், அங் கேரிபாளையம், செட்டிபாளையம், வள்ளி புரம் ஆகிய ஊர்களில் பித்தளை, அலுமினி யம், எவர்சில்வர், காப்பர் பாத்திரங்கள் உற் பத்தி செய்யப்பட்டுகிறது. குடிசைத் தொழி லாக நடந்து வரும் இங்கு, சுமார் 200 பாத்தி ரப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலில் சுமார் 3 ஆயிரம் பேரும், மறை முகமாக ஆயிரம் தொழிலாளர்களும் பணி யாற்றி வருகின்றனர். அரசின் கொள்கை மற் றும் வங்கிகள் உதவியின்மை காரணமாக தொழில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலை யில், இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வரும் பாத்திரங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. மேலும், கடந்த 2023 ஜனவரி முதல் மாநில அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தியது, இத் தொழிலை சரிவை நோக்கி தள்ளியுள்ளது. பாத்திரத் தொழிலில் கடைசியாக செய்து முடிக்க வேண்டிய பாலிஷ் மிக முக்கியமான வேலையாகும். மின்சார மோட்டார்களைக் கொண்டு வேலை செய்து வரும் பாலீஸ் பிரிவு பட்டறைகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின் மீட்டர்களுக்கு அருகில் கெபா சிட்டர் எனப்படும் கருவியை மின்கணக்கீடு செய்யும் ஊழியர்கள் பொருத்தி வருகின்ற னர். இதன் காரணமாக ஏற்கனவே ஒரு பாலிஸ் பட்டறைக்கு இரண்டு மாதத்திற்கு ரூ.8000 மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற் போது ரூ.14 ஆயிரம் மின் கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாபாரம் மந் தம், மூலப் பொருட்களின் விலையேற்றம் கார ணமாக நசிந்து வரும் பாத்திர தொழிலில் கெப்பாசிட்டர் கருவி பொருத்த வேண்டும் என்ற நிர்பந்தம் மின் கட்டண உயர்வு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே, முன்னறிவிப்பின்றி செயல்ப டுத்தும் நடவடிக்கையை மின்வாரியம் நிறுத்த வேண்டும். கெப்பாசிட்டர் பொருத்தா மல் உள்ள பட்டறைகளுக்கு பெனால்டி விதிப் பதை ரத்து செய்ய வேண்டும். விசைத்தறி களுக்கு வழங்குவதைப் போல பாத்திரத் தொழிலுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். பாத்திரத் தொழிலுக்கு என தனியாக குறைந்த மின் கட்டண விகிதங் களை அமல்படுத்த வேண்டும். மின் கட்ட ணத்தை உயர்த்தக் கூடாது. மாதம் மின் கட் டணம் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து திங்களன்று (இன்று) அனுப்பர் பாளையம் - ஆத்துப்பாளையம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளதென, சிஐடியு பாத் திரத் தொழிலாளர் சங்கத் தலைவர் அ.ஆறு முகம், செயலாளர் கே.குப்புசாமி ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.
மக்காச்சோளத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை
உடுமலை, நவ.17- மக்காச்சோளத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. பயிர் செய்யும் போது, மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2560 வரை விலை இருக்கும். ஆனால், அறுவடை காலத்தில் ரூ.1700 முதல் ரூ.1800 வரை மட்டுமே வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து விடுகின்றனர். ஒரு ஏக்கர் மக்காசோளம் பயிர் செய்ய ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு ஏற்படு கிறது. தற்பொழுது அதீத மழை பெய்த காரணத்தால் விலைச் சலும் குறைந்துள்ளது. மேலும், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதி களில் விவசாயிகள் வருடம் முழுவதும் மக்காச்சோளத்தை அதிகமாக உற்பத்தி செய்வதால், கால்நடைகள் மற்றும் கோழி தீவன நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிறு வனங்களுடன் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து, செயற்கை யாக விலை குறைப்பு செய்து விடுகின்றனர். எனவே, ஒன் றிய, மாநில அரசுகள் மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கக் கோரிக்கை
கூடுதல் மண்ணெண்ணெய் வழங்கக் கோரிக்கை உடுமலை, நவ.17- மலைவாழ் மக்களுக்கு கூடுதல் மண்ணெணய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குழிபட்டி, மாவடாப்பு, குருமலை, மேல்குருமலை, பூச்சிகொட்டாம் பாறை, ஈசல்திட்டு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருமூர்த்தி மலை குடியிருப்பு, மலையடிவார பகுதிகள் என 18 மக்கள் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேல் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், மலைவாழ் மக்கள் நடத் திய போராட்டத்தின் காரணமாக சில சலுகைகளை பெற முடித்தது. இதன்படி ரேசன் பொருட்கள் மலைவாழ் மக்க ளின் குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக வாகனத்தின் மூலம் தரப்படுகிறது. இதில் வழங்கபடும் மண்ணெண்ணெய் அளவு, சமவெளிப் பகுதி மக்களுக்கு வழங்கபடும் அதே அளவு விநியோகிக்கப்படுகிறது. சமையல் மற்றும் இரவு நேர விளக்குகளுக்கு என்று அதிகமாக மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி யுள்ளதால், ரேசன் அட்டைக்கு தலா பத்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகலில் 2 சிறுத்தைகள் உலா
கோவை, நவ.17- வால்பாறையை அடுத்த கக்கன் காலனி பகுதியில். பகல் நேரங்களில் உலா வந்த சிறுத்தைகளால், அப் பகுதி பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப் பகம் வால்பாறை வனச்சரகத் திற்குட்பட்ட, வால்பாறை டவுன் பகுதியை ஒட்டி யுள்ளது கக்கன் காலனி. இப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரங் களில் உலா வருவது வழக் கம். இந்நிலையில், அப் பகுதியில் ஞாயிறன்று பக லில் இரண்டு சிறுத்தை களை உலா வந்தன. அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங் களில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாகி, அப் பகுதி பொதுமக்களிடயே பெரும் அச்சத்தை உரு வாகி உள்ளது. மேலும், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாத வண் ணம் வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.