districts

கோவையில் பயங்கரம்: 2 பேர் கத்தியால் வெட்டிக்கொலை

கோவை, பிப்.13- ஆவாரம்பாளையத்தில் ஒருவ ரை விரட்டி விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள் ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பாப்பநாயக்கன்பா ளையம், பழையூர் பகுதியை சேர்ந்த வர் சக்தி என்கிற சத்தியபாண்டி (32). ஓட்டுனரான இவர் ஞாயிறன்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையிலுள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் 2 இருசக்கர வாகனத்தில் வந்து திடீரென்று அரி வாளால் சத்தியபாண்டியை வெட்டி னர். இதனால் அச்சம் அடைந்த சத் தியபாண்டி உயிர் பிழைக்க அங்கி ருந்து ஓடி, சாலையோரம் இருந்த ஒரு  வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று வீட்டிற்குள் புகுந்து வெட்டியுள்ளது.

மேலும், துப்பாக்கியால் சுட்டதா கவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத் தில் சத்திய பாண்டி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பந்தையசாலை  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சத்தியபாண்டி உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி புரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து காரணமாக இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட் டார். இந்த சம்வத்தில் சத்தியபாண்டிக் கும் தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இந்த கொலை தொடர்பாக சத் தியபாண்டி கைது செய்யப்பட்டு பின் னர் ஜாமீனில் வெளியே வந்து உள் ளார். எனவே முன்விரோதம் காரண மாக கட்டப்பஞ்சாயத்து கும்பலால் இவர் கொலை செய்யப்பட்டு இருக்க லாம் என்றும், ரியஸ் எஸ்டேட்  மாபியா கும்பலின் கைவரிசையாக வும் இருக்க வாய்ப்பு என்கிற கோணத் தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக் கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றம் அருகே வாலிபர் கொலை

கோவை ஒருங்கினைந்த நீதி மன்றத்தின் பின்புறம் கோபாலபுரம், 2  ஆவது வீதியில் வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத் தின் பின்புறம் மற்றொரு வழி இருப்ப தால் பெரும்பாலானோர் இவ்வ ழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று இருவர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பு  அருகாமையில் இருந்த கடையில் டீ  குடிப்பதற்காக நின்றுள்ளனர். அப் போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாங் கள் மறைத்து வைத்திருந்த கத்தி யால் டீ கடையிலிருந்த வாலிபரை சர  மாரியாக குத்தினர். இதில், கழுத்து வெட்டப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு வாலிபருக்கும் தலை மற் றும் கையில் கத்தி குத்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த  போலீசார் கொலை செய்யப்பட்ட வாலி பர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், காயமடைந்த மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். விசாரணையில், கொலை யுண்டது கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிவானந்தா காலனி யைச் சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. கொலை சம்பவம் நடந்த பகு தியை காவல் துணை ஆனையர் சந்தீஸ் பார்வையிட்டார். அந்த பகுதி யில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரில், அடுத்தடுத்து இரண்டு கொலைகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.