தருமபுரி: சாதிப்பெயரை சொல்லி பெண் மீது தாக்குதல்
4 பேர் மீது வன்கொடுமை வழக்கு
தருமபுரி, ஜன.29- காரிமங்கலம் அருகே சாதிப் பெயரை சொல்லி, பெண்ணை தாக் கிய 4 பேர் மீது காவல் துறையினர் வன் கொடுமை வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பகு தியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மகள் சித்ரா (25), பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பெரியம்பட்டியில் உள்ள தனியார் ஊறுகாய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, காரிமங்கலம் அருகேயுள்ள பொன்னேரி கிராமத் தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக் கும், சித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த னர். இந்நிலையில் இருவரும் திரு மணம் செய்து கொள்ள முடிவெ டுத்து, அனுமந்தபுரம் அருகேயுள்ள முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலை யில், கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு, ராஜ்குமாரை சந்தித்து வந்துள்ளார். இதனிடையே தனக்கும், ராஜ்குமா ருக்கும் திருமணமானதை தனது பெற் றோரிடம் சித்ரா கூறியுள்ளார். இதே போல் திருமணம் ஆனதை அவரது பெற்றோரிடம் கூறுமாறு ராஜ் குமாரை சித்ரா வலியுறுத்தியுள்ளார். இதற்கு ராஜ்குமார் மறுப்பு தெரி வித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் பெற்றோரை சந்தித்து சித்ரா திருமணம் ஆனதை சொல்லி யுள்ளார். அப்போது அவரது பெற் றோர் சித்ராவின் சாதிப்பெயரை சொல்லி அவமானப்படுத்தியுள்ள னர். இதனையடுத்து ராஜ்குமார் சித் ராவிடம் பேசுவதை தவிர்த்து கொண் டார். இதனால் அவரை தேடி பொன் னேரியில் உள்ள அவரது வீட்டுக்கு சித்ரா வந்தபோது, ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ராவின் சாதிப்பெயரை இழிவாக சொல்லி தாக் கியுள்ளனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் துறை யினர் விசாரணை நடத்தி பொன்னேரி யைச் சேர்ந்த ராஜ்குமார் (26), அவரது தந்தை பிரகாஷ் (49), தாய் கோவிந்த மாள் (46), சகோதரன் செந்தில் (28) ஆகிய 4 பேர் மீதும் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரியாற்றில் கழிவுநீர் திறப்பை கண்டித்து தெருமுனைக் கூட்டம்
நாமக்கல், ஜன.29- சாயக்கழிவு நீரை காவிரியாற்றில் கலந்து விடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவத்தி பாளையத்தில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் ஏராள மான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப் படியே காவிரியாற்றில் திறந்து விடப்படுவதால், காவிரி யாற்று நீரை பயன்படுத்தும் பொழுது மக்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சனைகள் ஏற்படு கிறது. தொடர்ந்து காவிரியாற்றில் கழிவுநீரை வெளியேற்றும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆவத்திபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மதி முக மாவட்டச் செயலாளர் கே.கே.கணேசன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அசன், இடதுசாரி சிந்த னையாளர் ராஜாராம், திவிக முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத மது விற்பனை: 3 பேர் கைது
தருமபுரி, ஜன.29- கிருஷ்ணாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் அப்பகு தியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திப்பம்பட்டி பகுதி யில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டி ருந்த மாசிலாமணி (30), வன்னிகுளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலம் (34) ஆகியோரை கைது செய்து, அவர்களி டமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் புளியம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (56) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்டி ருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
டோக்கன் வழங்கும் பணிக்கு குறைந்தகாசா? நியாயவிலைக் கடை ஊழியர்கள் குமுறல்
திருப்பூர், ஜன. 29 - தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகை வழங்கிய திட்டத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கிய ரேஷன் ஊழி யர்களுக்கு ஒரு டோக்கனுக்கு 50 பைசா என தொகை நிர்ணயம் செய்துள்ளனர். யாசகம் பெருபவர்களே 50 பைசாவை வாங்க மறுக்கும் இன்றைய காலத்தில், ஒவ்வொரு ரேஷன் பணியா ளரும் வீடு வீடாக அலைந்து டோக்கன் கொடுத்ததற்கு 50 பைசா என நிர்ண யம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ரேஷன் ஊழியர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு கடையிலும் குறைந்த பட்சம் 800 ரேஷன் கார்டுகள் முதல் 1100 ரேஷன் கார்டுகள் வரை வீடு வீடாக சென்று ரேஷன் ஊழியர்கள் டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். இதன்படி கணக்கிட்டால் டோக்கன் கொடுத்த ஒரு ஊழியருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 400 முதல் அதிகபட்சம் ரூபாய் 550 மட்டுமே கிடைக்கும். கடுமையான வேலைப் பளு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக அலைந்து திரிந்து வீடுகளில் டோக்கன் கொடுத்து வந்தோம். அதுவும் பல் வேறு பகுதிகளில் கடைக்கு வெகு தொலைவில் ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கும் நிலையில் வாகனங்களில் சென்று டோக்கன் கொடுக்கும் நிலை யும் ஏற்பட்டது. குறைந்தபட்சம் எரி பொருள் செலவுக்கு கூட இந்தத் தொகை போதாது. எனவே தமிழக அரசின் உங்கள் பரிசுத் தொகை திட்டத் திற்கு டோக்கன் வழங்கிய எங்களுக்கு அதற்குரிய படித்தொகையை அதிகப் படுத்தி வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள் தெரிவித்தனர். அத்துடன் சுற்றறிக்கை வந்த பிறகு 50 பைசா என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பெரும்பான்மையான ஊழி யர்கள் அந்தத் தொகையை பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். எனவே அர சின் திட்டத்தை மக்களிடம் முறையாக கொண்டு சேர்த்த ரேஷன் பணியாளர்க ளுக்கு உரிய நியாயம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
காகிதக் கவர் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு
திருப்பூர், ஜன.29 – திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கி யின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இலவச காகிதக் கவர், என்வலப் மற்றும் கோப்பு தயாரித்தல் 30 நாள் முழு நேரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கான நேர்காணல் வரும் பிப்ரவரி 5 திங்களன்று நடைபெற உள்ளது எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, இருபா லரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் மத்திய அர சின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும், “முதலில் வருவோர்க்கு முன்னுரிமை வழங் கப்படும்”. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 9489043923, 9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் படி பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ் குமார் தெரிவித்துள் ளார்.
புத்தகத் திருவிழா மாணவர் திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு இன்று பரிசளிப்பு
திருப்பூர், ஜன. 29 - 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவ, மாணவியர் கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இன்று பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார் பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகி றது. முன்னதாக கடந்த 7ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தின் 26 இடங்களில் மாணவ, மாண வியருக்கான கலை, இலக்கியத் திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. வழக்கத்தை விட மிக அதிக எண்ணிக்கையில் 12 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத் துடன் இப்போட்டிகளில் பங்கேற்றனர். 26 மையங்களில் ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றோ ருக்கு பிரிவு வாரியாக முதல் மூன்று இடங்க ளைப் பெற்றோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அத்துடன் ஆறுதல் பரிசு பெறுவோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற் றோர் மற்றும் கை அச்சு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்ப டுகின்றன. மொத்தம் 512 பேர் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பரிசளிப்பு விழா புத்தகக் கண்காட்சி வளாகத்தில் செவ்வாயன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் என்.கீதா தலைமை யில் நடைபெறும் இவ்விழாவில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபி நபு மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணை யர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்க உள்ளனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு மனு
ஈரோடு, ஜன. 29- பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ராயன் பாளையம் மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெரியகொடிவேரி பேரூராட்சிக் குட்பட்டது சென்ராயன்பாளையம். இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிசை வீடுகளில் வசித்து வரும் இம்மக்களுக்கு பட்டா, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதுகுறித்து பல முறை பெரியகொடிவேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சென்ராயம்பாளையம் பகுதியில் வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர்.
போதை பொருட்கள் பறிமுதல்
நீலகிரி, ஜன.29- நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட் களை விற்பனை செய்வது, தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் தடையை மீறி நடந்து வருகிறது. இதை கண்கா ணிக்க பணியில் போலீசார் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நோட்ட மிட்டு, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள என்.எஸ்.ஜே என்ற மளிகை கடையில் போதை பொருட் கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலையடுத்து, குன்னூர் குற்றப்பிரிவு போலீசார் சம்மந்தப்பட்ட கடையில் தீவிர சோதனை செய்த னர். அதில், ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடையின் உரிமையாளர் ஜெயசிம்மன் (55) என்பவரை கைது செய்த போலீசார், 150 கிலோ கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இறந்த குட்டியை தூக்கி சுற்றும் தாய்குரங்கு
நீலகிரி, ஜன.29- உதகையில், இறந்த குட்டியை வாயில் கவ்விக்கொண்டு இரண்டு நாட்களாக சுற்றி வரும் தாய் குரங்கின் பாசப் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியில், காட்டு யானை கள், புலிகள், சிறுத்தைகள், குரங்குகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கு, உதகையை அடுத்த மஞ்சூர் அருகே உள்ள தூனேரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கூட்டம் குடியிருப்பின் அருகே உலா வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த குரங்கு குட்டி ஒன்று இறந்துள்ளது. மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்த குரங்குக் குட்டியை தாய் குரங்கு ஒன்று அரவணைத்தபடி சாலையில் அங்கும், இங்குமாய் சுற்றித் திரிகிறது. இதை கவனித்த சுற்றுலா பயணிகள் வீடியோ வாக எடுக்க, அக்காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக, குரங்குக்குட்டியின் உடலை தூக்கிச் செல்லும் தாய் குரங் கின் பாசப் போராட்டம்காண்போரை கண்கலங்க வைத்துள் ளது.
சிறுவன் சாதனை
கோவை, ஜன.29- ஆனைமலை அருகே 900 கிலோ எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை 2.47 நிமிடத்தில் இழுத்து ஏழு வயது மாண வர் சாதனை படைத்துள்ளார். கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த ஆழி யார் அறிவித்திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவர் தேவசுகன்(7). பொள்ளாச்சி ரௌத்திரம் தற்காப்பு கலை கள் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். இவர், திங்க ளன்று 900 கிலோ எடை கொண்ட நான்கு சக்கர வாகனத் தை 2.47 நிமிடத்தில் 220 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத் தார். இவரது சாதனை சோழன் உலக சாதனை புத்தகத் தில் இடம் பிடித்துள்ளது. மேலும், இவரது சாதனையை பாராட்டி இவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங் கப்பட்டன. ஏழு வயது சிறுவன் செய்த இந்த சாதனை அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின் றனர்.
பேருந்தை தாக்க முயன்ற காட்டுயானை
வால்பாறை, ஜன.29- வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை தாக்க முற்பட்ட சம்பவம் பேருந்து பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து காடம்பாறை மற்றும் வெள்ளிமுடி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்ப குதிக்கு, பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று அட்டகட்டி வழியாக காடம் பாறை நோக்கி செல்வது வழக்கம். இந்நி லையில், ஞாயிறன்று இரவு அப்பகுதியில் சென்ற பேருந்தை, மரப்பாலம் அருகே நின்றி ருந்த காட்டு யானை ஒன்று வழிமறித்தது. இத னைக் கண்ட பேருந்து ஓட்டுநர் ஒலி எழுப்பி யானையை விரட்ட முற்பட்டார். இதனால், ஆக்ரோசம் கொண்ட யானை பேருந்தை தாக்க முற்பட்டது. இருப்பினும், ஓட்டுநர் சாமர்த்தியமாக இடைவிடாது ஒலியை எழுப்ப, யானை பயந்து காட்டுப் பகுதிக் குள் சென்றது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக இதே ஒற்றைக் காட்டு யானை, அப்பகுதியில் இருந்த மின் ஊழியரின் காரை சேதப்படுத் திய நிலையில், தற்போது பேருந்தை தாக்க முயன்றுள்ளது. எனவே வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
வரத்து அதிகரிப்பு: வெங்காயத்தின் விலை குறைவு
கோவை, ஜன.29- கோவையில், வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பதன் காரணமாக விலை குறைந் துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வெங் காயத்தின் விலை உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்கா யம் போன்றவை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலை யில், தற்பொழுது வரத்து அதிகரித்து இருப் பதன் காரணமாக வெங்காய விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கோவை உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் மற்றும் தியாகி குமரன் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் வெங்காயத்தின் விலை திங்களன்று 20 முதல் 25 ரூபாய் வரைக்கும் விற்பனை செய் யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க் கும், பெரிய வெங்காயம் கிலோ 25 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 40 முதல் 50 ரூபாய் வரை விற் பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பல்லடம், ராசிபுரம் மற்றும் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரிப்பதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து வருவதாகவும், வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் விலை குறையும் என எதிர்பார்ப்பதாகவும் வியா பாரிகள் தெரிவித்தனர்.
தார் சாலை கேட்டு சங்கு ஊதி மனு
ஈரோடு, ஜன. 29- ஈரோடு மாவட்டம், பெருந்தலையூர் ஊராட்சி, செரையாம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதியபடி வந்து நூதனமுறையில் மனு அளித்தார். அம்மனுவில், செரையாம் பாளையம் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் தார் சாலையானது மிகவும் பழுதடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் தொடங் கப்பட்டன. சிறு ஜல்லிகற்கள் சாலையில் கொட்டப்பட்டன. அதன் பிறகு பணிகள் ஏதும் செய்யவில்லை. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைப் பணிகளை முழு மையாக முடிக்க வேண்டும் என்று பல முறை ஊராட்சி நிர் வாகத்திடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணி களை முடித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்பை நம்பி செங்குத்தான படிக்கட்டில் சிக்கிய கார்
நீலகிரி, ஜன.29- கூடலூர் அருகே கூகுள் மேப் உதவியுடன் மலைப்பாதை யில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் ஆபத்தான படிக் கட்டின் நடுவே சிக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி என்பது தமிழக, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. இங்கு இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூர் வழி யாகவே உதகை போன்ற பிற சுற்றுலாத் தலங்களுக்கு செல் கின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையால் கடந்த மூன்று நாட்களாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நீல கிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநில இளைஞர்கள் சிலர் ஒரு சொகுசு காரில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கூகுள் மேப் உதவி யுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, கூடலூர் அருகே வரும்போது கூகுள் மேப் காட் டிய சாலையில் சென்றுள்ளனர். அப்போது, கூடலூர் குடியி ருப்பு பகுதிக்குள் நுழைந்த அவர்கள், திடீரென செங்குத் தான படிக்கட்டுகள் நிறைந்த பகுதியில் காருடன் சிக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து படிக்கட்டில் சிக்கிய காரை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு
நாமக்கல், ஜன.29- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கொல்லிமலை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில், விவசாயி கள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதி களில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைக ளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் ஒரு டன் மர வள்ளிக்கிழங்கு ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்து, ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகி றது. இதேபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு, கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையா னது. தற்போது ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
இரை தேடி வந்த ஆண் புள்ளிமான்
சேலம், ஜன.29- சேலம் மாவட்டம், ஆத் தூர் வனக்கோட்டத்திற்குட் பட்ட பைத்தூர், ராமநாயக் கன்பாளையம், முட்டல் உள் ளிட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வனவிலங்குகள் அதி களவில் உள்ளன. வன விலங்குகள் இரை, தண்ணீர் தேடி அவ்வப்போது மலை யையொட்டியுள்ள கிராம பகுதிகளுக்கு வந்து செல் வது வழக்கம். இந்நிலை யில், ஆத்தூர் நகராட்சிக்குட் பட்ட கண்ணாடிமில், பாம் பாட்டி நாயக்கர் தெரு பகுதி யில் ஒரு வயது மதிக்கத் தக்க ஆண் புள்ளிமான் ஒன்று இரை தேடி சுற்றி திரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி யைச் சேர்ந்த இளைஞர்கள் மானை பிடித்து, வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர். இதன்பின் வனத்துறை யினர் புள்ளிமானை மீட்டு முட்டல் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கல்வி கடனுக்காக அழைக்கழிக்கும் வங்கி மேலாளர்
ஆட்சியரிடம் மாணவர் புகார் தருமபுரி, ஜன.29- கல்விக்கடன் வழங்குவதாக அழைக்க ழிக்கும் வங்கி மேலாளர் மீது பொறியியல் மாணவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி வட்டம், மூலக்காடு கிராமத் தைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய நான், கோவை யிலுள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருகி றார். என் தந்தையால் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் நான் கல்விக்கடன் கேட்டு, கிருஷ்ணாபுரம் சென்டல்பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் மேலாளரிடம் விண்ணப்பித்திருந்தேன். இவர் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்தார். இது குறித்து வங்கியின் மண்டல மேலாளரிடம் முறையிட்டதன் அடிப்படையில் எனக்கு கல் விக்கடன் வழங்க உத்தரவிட்டார். அதன் பிற கும் வங்கி மேலாளர் கடன் வழங்காமல் அழைக் கழித்து வருகிறார். இதனால் நானும், எனது குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளோம். எனவே, கல்விக்கடன் கிடைக்க செய்து, எனது படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.
மனைவி கொலை: கணவர் உட்பட 2 பேர் சிறையில் அடைப்பு
சேலம், ஜன.29- நங்கவள்ளி அருகே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் உட்பட 2 பேரை காவல் துறை யினர் கைது செய்து, சிறையில் அடைத் தனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சாணாரபட்டியைச் சேர்ந் தவர் ஈஸ்வரன் (58). குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது மனைவி இந்திராணி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு, இந்தி ராணி சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர் கழுத் தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலிக் கொடி திருடப்பட்டிருந்தது. இதுகு றித்து சேலம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அருண்கபிலன், துணை கண்காளிப்பாளர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை செய் தனர். மேலும் ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளர் சசிகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தொடக்கத்தில் நகைக்காக குப்பம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பாலு என் கிற பாலமுருகன் (28) என்பவர் அடித்து கொலை செய்துவிட்டு, நகையை அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்பட்டது. காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போது, ஈஸ்வர னுக்கும் அவரது மனைவி இந்திராணிக் கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள் ளது. மேலும், ஈஸ்வரனுக்கு பல பெண் களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் இருவரிடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திர மடைந்த ஈஸ்வரன் அவரது தோட்டத் தில் வேலை பார்த்த பாலமுருகனுடன் இந்திராணியை கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நாடகமாடி யது தெரியவந்தது. இதையடுத்து இரு வரையும் காவல் துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
எள் விளைச்சல் அதிகரிப்பு
நாமக்கல், ஜன.29- புதுச்சத்திரம் அருகே எள் விளைச்சல் அதிகரித்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரப் பகுதியான நவணி, இடையப்பட்டி, ஓலப்பாளையம், அகரம், சேவாக வுண்டம்பாளையம், லக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசா யிகள் கடந்த கார்த்திகை மாதம் எள் பயிரிட்டுள்ளனர். தற் போது நல்ல விளைச்சல் கண்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. புதுச்சத்திரம் வட்டார பகுதியில் 120க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் என் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ள தால், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எள் விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு போதிய மழை இல்லாததால், எள் விதைப்பு பரப்பு குறைந்துள்ளது. இருந்த போதிலும் செடியில் காய்கள் அதிகளவில் பிடித்திருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைக் கும் என நம்புகிறோம். தற்போது ஒரு கிலோ எள் ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது, என்றனர்.