districts

img

வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

மேட்டுப்பாளையம், ஜூலை 9- மேட்டுப்பாளையம் - உதகை நெடுஞ்சாலையில் காவல் துறை வாகனமும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர்  மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று  கொண்டிருந்த இருசக்கர வாகனமும், உதகையில் இருந்து  மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு சொந்த மான காரும் கல்லார் தூரிபாலம் அருகே திங்களன்று நேருக்கு  நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத் தில் வந்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காய மடைந்தனர். காரில் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம்  தீப்பிடித்து எரிய தொடங்கியது. இச்சம்பவம் குறித்து மேட்டுப் பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்த அல்தாப் (21) மற்றும் முகமது  ஜூனைத் (20) என்ற இருவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்களன்று அல் தாப் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல்  செவ்வாயன்று முகமது ஜூனைத்தும் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.