districts

img

அச்சுப் பொருட்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி

கோவை, ஏப்.7- காகிதம், மை உள்ளிட்ட அச்சுப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு 12  சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித மாக ஜிஎஸ்டியை உயர்த்தியதால் அச்சுத்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி கோவையில் அச்சக உரிமையாளர் கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்ட அச்சகதார் சங் கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் குமாரவேல் தலைமையில் கோவை  தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில், பெரும்பாலான அச் சுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித மாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. சாதாரண காகிதம் ஒரு டன் 7 ஆயிரம்  ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்ட் போர்ட் பேப்பர் டன்னுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், காகித விலை, பிளேட் விலை, கெமிக்கல் விலை களின் உயர்வை ஒன்றிய அரசு கட்டுப் படுத்த வேண்டும். காகித ஆலைகள் தினசரி விலையை ஏற்றக்கூடாது. ஒன் றிய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். காகித ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.  கொரோனா பெருந் தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை யில் இருந்து மீண்டு வரும் பொழுது, ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி விட்டது. இதுகுறித்து பலமுறை ஒன் றிய அரசிற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. காகித ஆலைகள் காகிதங்களை வர லாறு காணாத அளவிற்கு விலை உயர்த்தி விட்டது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகள் காகித ஆலை நிர் வாகிகளை அழைத்து பேச வேண்டும், என்றனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி அச்சக உரிமையாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.