districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலத்தில் புதிதாக 175 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சேலம், ஜூன் 8- சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக புதி தாக 175 நவீன கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட் டினை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹவுடா செவ்வாயன்று துவக்கி வைத்தார். சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர  காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக சூரமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட திருவ கவுண்டனூர் நெடுஞ்சாலை, வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்க ளிப்புடன் பொருத்தப்பட்டுள்ள 175 அதிநவீன கண்கா ணிப்பு கேமராக்கள் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹவுடா செவ்வாயன்று மாலை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா ளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, காவல் உதவி ஆணையா ளர் நாகராஜ் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட  பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

 ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தலைமறைவானவர் போலீசில் சரண்

தருமபுரி, ஜூன் 8- தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்த மணி வண்ணன் மற்றும் செந்தில்  இருவரும்  தருமபுரி மாவட்டத் தில் உள்ள குமாரசாமிபேட்டை, எம்ஜிஆர் நகர், பிடமனேரி, சோளக் கொட்டாய், நடுப்பட்டி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தியுள்ளனர். பகுதி வாரியாக பிரித்து பெண்களை அந்தந்த பகுதிக்கு ஒரு வர் என ஏஜெண்டுகளாக அமைத்து அவர்கள் மூலம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி  சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த இரு சீட்டுகளிலும்  சுமார்  2 ஆயிரம் நபர்களை உறுப்பினராக சேர்த்து கடந்த 6 ஆண்டு களாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ள னர்.  தீபாவளி சீட்டிற்கு மாதம் 1,500 ரூபாய் என 12 மாதங்கள் கட்டிய பிறகு, தீபாவளியன்று கட்டியவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் உட்பட பலகாரங்கள் கொடுத்து வந்துள்ள னர். பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டில் பணம் கட்டியுள்ளனர்.  இந்நிலையில் சீட்டு முடிந்த முதிர்வு அடைந்த சீட்டு பணத்தை பெற  மணிவண்ணன் வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது. தகவலறிந்த சீட்டு போட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்  குமாரசாமி பேட்டையில் உள்ள மணிவண்ண னின் உறவினரான செந்தில் என்பவரை பிடித்து வந்து  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், தருமபுரி நகர காவல் நிலையத்தில் தலைமறைவான மணிவண்ணனி டம் ஏலசீட்டு பணத்தை பெற்று தரவேண்டும் என  கடந்த 4 ஆம் தேதி புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் புகார் மனு மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்ற னர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணி வண்ணன் போலீசில் சரணடைந்தார்.

தேங்காய் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல், ஜூன் 8- தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.  கடந்த   வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 925 கிலோ தேங் காய்களை ‌விவசாயிகள் கொண்டு வந்திருந்த னர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.23.90 க்கும்,  குறைந்த பட்சமாக ரூ. 16.50 க்கும், சராசரியாக ரூ.22 க்கும்  ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 201க்கு வர்த்த கம் நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற ‌ஏலத் திற்கு 4 ஆயிரத்து 767 கிலோ தேங்காய்களை விவசாயி கள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்ச மாக கிலோ ‌ஒன்று ரூ.25.15 க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.29 க்கும், சராசரியாக ரூ.‌23.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 826 க்கு வர்த்தகம் நடை பெற்றது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை 

தருமபுரி, ஜூன் 8- தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலி குண்டு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம், ஓசூர்  மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், செவ்வாயன்று ஒகே னக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி யாக அதிகரித்தது. அதேபோல், புதனன்றும்  வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், ஒகே னக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கூடாது. படகு களை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என புதனன்று தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை  செய்துள்ளது. தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வரு கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீ சார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜூன் 8- ஓய்வு பெற்ற அரசு அலு வலர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்ட அரங்கம் தரைதளத்தில் ஜூலை 19 ஆம் தேதி செவ்வாயன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை, நிதித்துறை ஓய்வூதிய  இயக்குநர் பங்கேற்கிறார். எனவே, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய் வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப் பின் தங்களது முறையீட்டு மனுக்களை தரலாம். இரண்டு பிரதிகளுடன்  ஜீலை மாதம் 9 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவ லக ஐந்தாம் தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளரிடம் நேரி லோ அல்லது தபால் மூலமா கவோ அனுப்பி வைக்க லாம். 

உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு

திருப்பூர் ஜூன் 8- தமிழ்நாடு அனைத்துவகை  மாற்றுதிறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் திருப்பூர் மாவட்ட மாநாடு ஜூலை17, 18 ஆம் தேதியன்று உடுமலையில் நடை பெறுகிறது. இதன் வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் செவ்வா யன்று உடுமலைப்பேட்டை ஸ்டாலின் நிலையத்தில் செல்ல துரை ஆசிரியர்  தலைமையில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் மாவட்டத்தலைவர் ஜெயபால், மாவட்டச் செய லாளர் ராஜேஷ் பங்கேற்றனர். மேலும் மாநாட்டை  வெற்றி கரமாக  நடைபெற  வரவேற்புக்குழு  தலைவராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர செயலாளர் தண்ட பாணி, செயலாளராக மாலினி, பொருளாளராக சக்தி வேல் மற்றும் 23 பேர் கொண்ட நிர்வாகக்குழு, 80 பேர்  கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

திருப்பூர், ஜூன் 8- திருப்பூரில் வீட்டில் வாட்டர் ஹீட்டரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (29), அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வீட்டின் குளியலறை யில் உள்ள வாட்டர் ஹீட்டரை இயக்க செய்ய முற்பட்ட போது, திடீரென்று மின்சாரம் தாக்கி வினோத் தூக்கி வீசப் பட்டார். அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி வினோத் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் வாங்கி தருவதாக திருப்பூர் தொழிலதிபரிடம் நூதன பண மோசடி செய்தவர் கைது

திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அவினாசிபாளையம் பகு தியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் முகநூலில்,  கரூரைச் சேர்ந்த ராமதாஸ் என்ற ஒருவர் பழைய கார் விற்பனைக்கு இருப்பதாக பதிவு செய்திருந்தார். கார் புகைப் படத்துடன் பதிவு செய்திருந்ததை பார்த்து, ராமதாஸை  அவர் தொடர்பு கொண்டார். ரூ.1.50 லட்சம்  பணம் கொடுத் தால் உடனடியாக அந்த காரை நேரில் ஓட்டி வந்து ஒப்படைப் பதாகவும் ராமதாஸ் கூறியிருக்கிறார். இதை நம்பிய கார்த்தி கேயன், ராமதாஸ் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ரூ.1.50 லட்சம் பணத்தை அனுப்பி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு ராமதாஸின் செல்போன் அணைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏமாற்றமடைந்த கார்த்திகேயன் இது குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார்  கொடுத்தார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் விசாரணை நடத்தி கரூரைச் சேர்ந்த ராமதாஸை கைது செய் தார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

தாராபுரம், ஜூன் 8- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப் பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அலங்கி யம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தர ராஜ் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற் பனை செய்துவந்த  முருகன் (55) என்ற நபரை கைது செய்த னர். அவரிடமிருந்து 124 லாட்டரி டிக்கெட்டுகள், ரூ.13,600 பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

திருப்பூர் ஜூன் 8-  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 10ஆம்  தேதி காலை 10.30 மணிக்கு பல்லடம் சாலையில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட் டும் மையத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலை வர் எஸ்.வினித் தெரிவித்துள்ளார்.  இம்முகாமில் தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு பயன்தாரர்களை தேர்வுசெய்ய இருக்கி றார்கள் வேலை தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலு வலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து  கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல்  முதுநிலைப் பட்டதாரிகள் வரை ஐடிஐ டிப்ளமோ படித்த வர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெற்று உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலை  சேர்வதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. மேலும், விவரங்களுக்கு 0421 2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ் வினித் தெரிவித்துள் ளார்.

செலாம்பாளையத்தில் நாளை மின்தடை

செலாம்பாளையத்தில் நாளை மின்தடை தாராபுரம், ஜுன் 8 - செலாம்பாளையத்தில் வெள்ளியன்று பராமரிப்பு  பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழ் நாடு மின்சாரவாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், தாரா புரம் கோட்டம், செலாம்பாளையம் 110/22 கேவி துணை  மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளியன்று 10ஆம் தேதி காலை 9 மணி முதல்  மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின் தடை பகுதிகள் செலாம்பாளையம், தளவாய்பட்டிணம், ஊத்துப் பாளையம், சென்னக்கல்பாளையம், கொட்டமுத்தாம் பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் மற்றும் இதைச்சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

தென்னை: புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

திருப்பூர், ஜூன் 8- தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த உரிய ஆலோ சனைகளை வேளாண்மைத் துறை தெரிவித் துள்ளது. தற்போது பருவநிலை மாறுதல் கார ணங்களால் கருந்தலைப் புழு தாக்குதல் பர வலாக காணப்படுகிறது. இந்த தாக்குதல் ஏற்பட்டால் அனைத்து வயது மரங்களும்  தீயினால் கருகியது போல் தோற்றமளிக் கும். இந்த புழுக்கள் இலையின் அடிப்பகுதி யில் கூடுகளை உருவாக்கி இலையின் பச் சையத்தை உறிஞ்சுவதால் இலைகள் கருகி யது போல் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த, முதலில் பூச்சி  தாக்கிய மட்டைகளை வெட்டி அகற்றி நெருப்பிலிட்டு அழிக்க வேண்டும். கருந் தலை புழுக்களை கட்டுப்படுத்த பெத்த லிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணி களை எக்டருக்கு 3 ஆயிரம் என்ற எண்ணிக் கையில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னை தோப்புகளில் விட வேண்டும்.  தாக்குதல் அதிகமாக இருக்கும்பட் சத்தில் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படு மாறு டைக்குளோர்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீ தம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05  சதவீதம் (1 மி.லி/லி.) ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.  இதனைக் கட்டுப்ப டுத்த வேர் மூலம் பூச்சி மருந்து செலுத்த லாம். பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத் திற்கு காய்களையோ, இளநீரையோ உப யோகப்படுத்தக் கூடாது.  மருந்து தெளிப் பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து  விட வேண்டும். மோனோ குரோட்டோபாஸ் 36% எஸ்எல்  என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10  மி.லி. உடன் 10 மி.லி. தண்ணீர் கலந்து வேர்  மூலம் செலுத்த வேண்டும்.  மேலும் ஆலோச னைகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலை யம் (8940703385) ஆழியார் மற்றும் அருகில்  உள்ள வேளாண் துறை அலுவலர்களை அணுகலாம். ஒட்டுண்ணிகள் பெற தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  தனியார் நிறுவனம் (7092919291) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரி வித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி காலியிடங்கள் தேர்தல் இன்று வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருப்பூர் ஜூன் 8- ஊரக உள்ளாட்சி பதவியிடங்களில் ஏற் பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக் கப்பட்டுள்ளது.    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்  30 வரை ராஜினாமா, இறப்பு போன்ற   பல்வேறு காரணங்களால் ஊரக உள்ளாட்சி  பதவியிடங்களில் ஏற்பட்டுள்ள  காலியிடங் களை நிரப்பிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள தமிழ்நாடு மாநில  தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் அவி னாசி 16 வது வார்டு, பல்லடம் 1வது வார்டு  ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி இச்சிபாளையம் கிராம ஊராட்சித் தலை வர் மற்றும் அவினாசி அய்யம்பாளையம் 6வது வார்டு, குடிமங்கலம் 1வது வார்டு, காங்கேயம் ஆலாம்பாடி 9 ஆவது வார்டு, பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம்  7 ஆவது வார்டு, உடுமலைபேட்டை அந்தி யூர் 2 ஆவது வார்டு உறுப்பினர் ஆகிய ஐந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி யிடங்கள் காலியாக உள்ளன.  எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் கள் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஜூன் 9 அன்று பிற்பகல் 3  மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்குச் சாவடி பட்டியலில் ஏதும் மாற்றங்கள், மறுப் புகள் மற்றும் கோரிக்கைகள் இருப்பின் அது  தொடர்பாக நடைபெறும் கலந்தாலோ சனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகள்  மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக் கள் மற்றும் மறுப்புகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்தியூர்: ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஈரோடு, ஜூன் 8- அந்தியூர் அருகே நீரோடை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.25 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதி காரிகள் மீட்டனர்.  அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் இருந்து சின்னக் குளம் சாலையில் 1.25 ஏக்கர் நிலம் நீரோடை புறம்போக் கில் இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நிலத்தை  ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகி றது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப் பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி வரு வாய்த் துறையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து  ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்றனர். அப்போது அந்த  நபர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிரை அறு வடை செய்யும்வரை அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று மீட்பு நடவடிக்கையை கைவிட்டு சென்றனர்.  இந்நிலையில், பயிரிடப்பட்டிருந்த பயிர் அறுவடை செய் யப்பட்டது. இதனையடுத்து அந்தியூர் மண்டல துணை வட் டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்த 1.25 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மேலும், அந்த இடத்தில் நடப்பட்ட கற்கள் மற்றும் கம்பி வேலி கள் அகற்றப்பட்டன. இதற்கிடையே அசம்பாவித சம்ப வங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நடக்க இருப்பவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சீராணம்பாளையம்  தியாகி பழனிசாமி  43ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் இடம்: சீராணம்பாளையம் சிபிஎம் அலுவலகம் நாள்: வியாழன் நேரம்: மாலை 5 மணி பங்கேற்போர்: கே.காமராஜ் (மாநிலக்குழு),  செ.முத்துக்கண்ணன் (மாவட்டச்செயலாளர்), கே.உண்ணிகிருஷ்ணன் (மாவட்ட செயற்குழு), சி.மூர்த்தி (ஒன்றியச் செயலாளர்), கே.கணேசன் (ஊராட்சி மன்றத் தலைவர்), பி.முத்துசாமி (விசைத்தறி சங்க மாநிலத் தலைவர்).