150 ஆண்டுகள் பழமையான மரத்தை காக்க கோரிக்கை
திருப்பூர் அருகே பொங்கு பாளையம் ஊராட்சியில் 150 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் பட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த மரத்தை சுற்றி லும் சிமெண்ட் பூசப்பட்டுள்ள தால், இந்த மரத்திற்கு நீர் பெறும் வாய்ப்புதடுக்கப்பட்டுள் ளது. எனவே இந்த மரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று மின்தடை
உடுமலை, ஜூன் 12- மின் தட பாராமரிப்பின் காரணமாக உடுமலை துணை மின் நிலையத் திற்குட்பட்ட பகுதியில் மின் தடை அறிவிப்பை மின்வா ரியம் வெளியிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராம ரிப்பு வேலைகள் நடை பெறவுள்ளதால் உடுமலைப் பேட்டை நகரம், பழனி பாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி, சுண்டக் காம்பாளையம், ஆர். வேலூர், கணபதிபாளை யம், வெனசுபட்டி, தொட்டம் பட்டி, பொட்டயம்பா ளையம், பொட்டிநாயக்க னுர், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளை யம், புக்குளம், குறிச்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர் -2, ஜிவா நகர், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளை யம், கொங்கலக்குறிச்சி, மற்றும் குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 13 ஆம் தேதி வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
ரூ.2.45 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜூன் 12- சேவூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.2.45 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத் தில் விவசாயிகள் கலந்து கொண்டு 174 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் மறை முக ஏலத்தின் வாயிலாக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ.6,850 முதல் ரூ.7,100 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.6,450 முதல் ரூ.6,800 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ.6,000 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.45 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
திருப்பூர், ஜூன் 12- திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை, போதைப் பொருட்களை தடுக்கும் வகையில், உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின் போது குட்காக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் மில்லர் ஸ்டாப், மும்மூர்த்தி நகர், ஏ.பி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவைகளில் சோதனை செய்த னர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கூல்லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை போலீசார் கைது செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட் டது. 25 கிலோ குட்கா பொருட்களும், காலாவதியான 30 கிலோ பிஸ்கட் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்து, அழிக்கப் பட்டது.
அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்
உடுமலை, ஜூன் 12- உடுமலை பேருந்து நிலையத்தில் இருக்கை வசதிகள் இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில், தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர், பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நக ரங்களுக்கு செல்ல இங்கு வருகின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையத்தில், போதிய இருக்கைகள் இல்லா மல் உள்ளது. மேலும், அங்குள்ள கடைக ளின் கழிவுநீர், குப்பை நிறைந்து காணப்படு கிறது.
இதனால், அங்கு வருவோர் கடும் சிர மத்துக்குள்ளாகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில், கூடுதலாக இருக்கை வசதி கள், சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடு மலை நகர மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு
திருப்பூர், ஜூன் 12- திருப்பூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம் செல்போன் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் ஈரோடு, சேலம், நாமக் கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட புறநகர பகுதிகளுக்கு மான நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், செவ்வாயன்று பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணா மலை செல்ல வந்தவர் பேருந்துக்காக காத்தி ருக்கும் நேரத்தில் பேருந்து நிலைய வளாகத் திலேயே உறங்கியுள்ளார். அப்போது ஒரு வர் அவரது அருகில் உறங்குவது போல படுத்து அருகில் இருந்தவரின் செல்போனை திருடிச் சென்றுள்ளார். தூங்கிக் கொண்டி ருந்த நபர் எழுந்து பார்த்தபோது மொபைல் போன் இல்லாததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.
அருகில் இருந்த கடையிலுள்ள கண்கா ணிப்பு கேமராவில் பார்வையிட்டபோது இவரது செல்போனை ஒருவர் திருடி செல் வது தெரியவந்தது. வெளியூர் செல்ல வேண் டிய அவசரத்தில் புகார் எதுவும் கொடுக் காமல் பேருந்தில் ஏறிச் சென்றார். இச்சம்ப வம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் கிராம நிர்வாக உதவியாளர்கள் புலம்பல்
உடுமலை, ஜூன் 12- ஊதியம் பெறச்செல்லும் கிராம நிர்வாக உதவியாளர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக உதவியாளர்கள் தங்க ளுடய சம்பளம் தொடர்பான ரசீதுகளை பெற உடுமலை வட்டாச்சியர் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு லஞ்சம் தர வேண்டிய நிலை உள்ளதாக கிராம நிர்வாக உதவியா ளர்கள் தெரிவித்து உள்ளார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தினை தவறாக பயன்படுத்துகின்றனர். புதிய முறையில் கிராம உதவியாளர்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். ஊழியர்களின் ஊதிய பட்டியலை பெறுவதில் நூதன முறையில் சிக்கல்களை ஏற்படுத்தி, ஊதிய பட்டியலை இணையத்தில் பெற இயலாத வாறு செய்கின்றனர். மேலும், பாஸ்வேர்டு மற்றும் பிறந்த தேதிகளை மாற்றம் செய்து அதனை வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளரை அணுகி லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது.
மேலும் சம்பள ரசீதுகள் இருந்தால் மட்டுமே வங்கி கடன் மற்றும் மருத்துவ காப்பீட்டு பயன்களுக்கான அத்யாவசிய சான்றாவனமாகிறது. அதனை முறை கேடாக பயன்படுத்த கிரிமினலாக யோசித்து எளியமுறையில் பெற இயலாதவாறு திட்ட மிட்டு செய்கின்றனர். இத்தகைய நபர்களின் மீது துறை ரீதியாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் உரிய விசாரணை செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். வரு வாய்த்துறை ஊழியர்களை அதே துறை ஊழியர்களிடம் பணம் வாங்கும் நோக்கில் அரசு திட்டத்தை தவறாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெகிழி எரிக்கும் புகையால் மக்கள் அவதி
திருப்பூர், ஜூன் 12- உபயோகமற்ற நெகிழி உள்ளிட்ட குப்கைகளை சாலையில் போட்டு எரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒயரில் உள்ள செம்பு கம்பிகள், பழைய இரும்பு கடையில் எடை கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒயரிங் செய்ய பயன்படுத்தி பழைய ஒயர்களை வாங்கி செல்கின்றனர்.அவ்வகை ஒயர்களை தீ வைத்து எரித்து, செம்பு கம்பிகளை தனியே எடுத்து விற்கின்றனர். குறிப்பாக, தீ வைத்து எரிக்கும் போது, பிளாஸ்டிக் மேற்பரப்பு எரியும் போது, கடும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறுகிறது. அந்த புகையை சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. திருப்பூர் நொய்யல் ஆற்றுக்குள், பிளாஸ்டிக் பொருட்கள், ஒயர்களுக்கு தீ வைத்து எரிப்பதால், நகரப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுகிறது. நொய்யல் ஆற்றுக்குள் பழைய ஒயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறு, குறு ஜவுளி தொழிலுக்கு ஊக்கம் வழங்க கோரிக்கை
திருப்பூர், ஜூன் 12 - இந்தியாவில் ஜவுளி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றால் சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் (எம்.எஸ்.எம்.இ) மீது இந்திய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று திருப் பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியா ளர் சங்கம் (டீமா) கூறியுள்ளது.
இது குறித்து டீமா சங்கத் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 50 சதவீதம் சிறு, குறு, நடுத்தர நிறுவ னங்கள் மூடப்பட்டுள்ளது. மீண்டும் இயக்குவதற்கு அரசு எந்த நிபந்தனை யுமின்றி சிறப்பு நிதி வழங்கிட முன்வர வேண்டும். ஏற்றுமதிக்கு உண்டான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். புதிய சந்தைப்படுத்த வெளிநாட்டில் ஜவுளி கண்காட்சி நடத்திட சிறப்பு கவ னம் செலுத்த வேண்டும். மானியத்து டன் ஏற்றுமதிக்கு உண்டான ஊக்கத் தொகையை அதிகப்படுத்த வேண் டும்.
மூலப்பொருளான பருத்தி விலையை ஒழுங்குபடுத்த வேண்டும், இடைத்த ரகர்களை முழுமையாக ஒழிக்க வேண் டும். இறக்குமதிக்கு உண்டான பருத்தி வரியை முழுமையாக நீக்க வேண் டும். இந்தியா முழுவதும் சிறிய ஜவுளி பூங்காவை உருவாக்க, மானியத்துடன் சலுகை வழங்க வேண்டும். ஜவுளித் தொழிலுக்கு தனி வாரியம் அமைத்திட வேண்டும். எல்லா நாட்டிடமும் வரி யில்லா ஒப்பந்தம் (எஃப். டி.ஏ) செய்திட வேண்டும். இந்திய தேசிய ஆடையாக பருத்தி ஆடையை அரசு அறிவிக்க வேண்டும். பருத்தி நூல் முழுமையாக ஏற்றுமதி செய்ய தடை செய்ய வேண் டும். நமது மூலப்பொருள் பருத்தியை முழுமையாக ஜவுளி ஆக ஏற்றுமதி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று டீமா சங்கத் தலைவர் எம் பி முத்துரத்தினம் கேட்டுக் கொண் டுள்ளார்.