நாமக்கல், மார்ச் 10- பள்ளிபாளையத்தில் தியாகி வேலுச்சாமி அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அக்ரஹாரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை செயலாள ராக செயல்பட்டு வந்தவர் தோழர் சி. வேலுச்சாமி. கடந்த 2010 ஆம் ஆண்டு கந்து வட்டி கும்பல் ஒன்று இளம்பெண் வாங்கிய கடனுக்கு அந்தப் பெண் ணை கட்டாயப்படுத்தி அவரை பாலி யல் வல்லுறவு செய்து அதை இணை யதளத்தில் வெளியிட்டனர். இதுகு றித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதர வாக இருந்த தோழர் வேலுச்சாமியை கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்தனர். இச்சம் பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப ரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில், தோழர் வேலுச்சாமி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் பள்ளிபாளை யம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப் பட்டது. இந்த அனுசரிப்பு நிகழ்வானது பள்ளிபாளையம் ஆவரங்காடு கட்சி அலுவலகம், காவேரி ஆர் எஸ் தொழிற் சங்க அலுவலகம், மற்றும் அக்ரகாரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்க ளில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.அசோகன், படைவீடு பெரு மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவ சாய சங்கத்தின் இ.கோவிந்தராஜ் ,கட்சி கிளைச் செயலாளர்கள் மற்றும் வேலுச் சாமி அவர்களின் குடும்பத்தார் உள் ளிட்டோர் கலந்து கொண்டு தோழர் வேலுச்சாமின் திருவுருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.