districts

அனுவாவி கோவிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார்

கோவை, ஆக.27- அனுவாவி சுப்பிரமணிய கோவி லில் ரோப்கார் அமைப்பது தொடர் பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ரூ.13 கோடி திட்ட  மதிப்பில் 460 மீட்டருக்கு ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், பெரியதடா கம் பகுதியில் அமைந்துள்ள அனு வாவி சுப்பிரமணிய சுவாமி மலைக் கோவிலில் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மட்டுமே  செல்ல முடியும். இதர கோவில்களில் இருப்பது போல் இங்கு சாலைகளோ  வேறு வசதிகளோ இல்லை. எனவே, அடிவாரத்தில் இருந்து மேலே உள்ள கோவிலுக்கு செல்ல சாலை வசதி களோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை எழுந்தது. இந் நிலையில், அங்கு ரோப்கார் அமைப் பது குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற் கொண்டார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், 560 படி கள் கொண்ட இக்கோவிலில் 460 மீட் டர் அளவுள்ள ரோப்கார் வசதி ஏற் படுத்தி தர ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இந்த வசதி ரூ.13 கோடி மதிப் பில் திட்டமிடப்பட்டுள்ளது.

ரோப் கார் அமைக்கப்படுகின்ற பொழுது மக்க ளின் அடிப்படை தேவைகளான குடி நீர், கழிவறை வசதி அனைத்தும்  இணைந்து ஏற்பாடு செய்ய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருக்கழுக்குன் றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் ரோப் கார் வசதியை ஏற்படுத்தி தரு வதற்கும், மேலும் ஏற்கனவே பணி கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற கரூர் அய்யர்மலை திருக்கோ வில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் திருக்கோவில்களில் ரோப்கார் வசதி கள் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதே போல் மருதமலையில் மின்தூக்கி  (லிப்ட்), சுவாமிமலையில் மின்தூக்கி (லிப்ட்) அமைப்பதற்கு உண்டான சாத் தியக்கூறுகள் ஆராயப்பட்டு, மருத மலையில் அதற்கான பணிகள் துவங் கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்த பிறகு, சுமார் 922 கோவில்களில் குட முழுக்கு நடைபெற்றுள்ளது. 5135 கோடி ரூபாய் பெருமானமுள்ள 5335 ஏக்கர் நிலம் இந்த ஆட்சியில் தான்  மீட்கப்பட்டுள்ளது. அனுவாவி கோவில் நடைபாதை யில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் சென்சார் அல்லது மின் வேலிகள் அமைக்கப்படுமா என்பது குறித்தான கேள்விக்கு, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ சியம் தேவைப்பட்டால், அதனையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக் கப்படும், என்றார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அனுவாவி கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.