திருப்பூர், டிச. 17 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவ ரும், தமிழக மாதர் இயக்கத்தின் முக்கியத் தலைவருமான பாப்பா உமாநாத்தின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் திருப்பூர் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி பி.ஆர்.நிலையத்தில் சனிக்கிழமை காலை திருப்பூர், பி.ஆர். நிலையத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா தேவி, செயலாளர் கு.சரஸ்வதி, தெற்கு நகர் செயலாளர் சி.பானுமதி, தலைவர் மினி, கமிட்டி உறுப்பினர் சசி ஆகியோர் பங் கேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தின் முன்பு சனிக்கிழமை காலை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செய லாளர் கு.சரஸ்வதி, ஊத்துக்குளி கமிட்டி உறுப்பினர்கள் ஜீவரத்தினம், மீனாட்சி ஆகி யோர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். அனைத்திந்நிய ஜனநாயக மாதர் சங்கத் தின் மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாதர் சங்க செயலாளர் வி.ராதா, வி.சரஸ் வதி, பரிமளம், ஷைலாவதி மற்றும் பலர் அஞ் சலி செலுத்தினர. சிபிஐ எம் தாலுக்கா செயலாளர் ஆர்.வி. வடிவேல், கட்டுமான சங்கச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், விவசாய சங்க செயலாளர் ஈஸ்வரன், ஓய்வூதியர் சங்க செயலாளர் எம். கருணாநிதி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தி னர்.