கோவை, பிப்.5- தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத் துவமனைகளில் முதல் முறையாக CRT-D என்ற (கார்டியாக் ரீசின்க் ரோனைசேஷன் தெரபி டிஃபிபிரி லேட்டர்) கருவி கோவை அரசு மருத் துவமனை இதய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை யில் கோவை மட்டுமல்லாமல் திருப் பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அறுவை சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சர வணக்குமார் (54). என்பவர் இருதய துடிப்புடன் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். அவருக்கு இருதய துறை சிறப்பு மருத்துவர்கள் 3 மின்னேற் றம் கொடுத்து இருதய துடிப்பை சீராக்கி காப்பாற்றினர். தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே பேஸ்மேக் கர் பொருத்தப்பட்ட நிலையில் இரு தய துடிப்பு அதிகரித்தால் தானாக மின்னேற்றம் கொடுக்கும் சிஆர்டி-டி (CRT-D) கருவியை அரசு மருத் துவமனை மருத்துவர்கள் வெற்றி கரமாக பொருத்தினர். ரூ.10 லட்சம் மதிப்பிலான கருவி மற்றும் அறுவை சிகிச்சையை முதல்வர் காப்பீடு திட் டம் மூலம் இலவசமாக செய்துள்ள னர். இதுவரை தனியார் மருத்துவம னைகளில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டு வந்த இந்த அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதல் முறை யாக கோவை அரசு மருத்துவம னையில் வெற்றிகரமாக செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களிடம் கூறியதா வது, கடந்த 2 ஆம் தேதியன்று சர வணக்குமார் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அப் போது அவருக்கு இருதய துடிப்பு 250 ஆக இருந்தது. மேலும் அடிக் கடி இந்த பிரச்சனை இருந்துள்ளது. மேலும், இதனை பேஸ்மேக்கர் மூலம் கூட கட்டுப்படுத்த முடிய வில்லை. உடனடியாக இருதயவி யல் துறை மருத்துவர்கள் சிகிச்சை யளித்து சிஆர்டி - டி கருவியை பொருத்தியுள்ளனர். மேலும் முதல் வர் காப்பீடு மூலம் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி உடலுடன் இணையும் வரை அதிக எடையை தூக்க கூடாது, கடுமை யான வேலைகளை செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனி யார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை ஆகும். இக்கருவி இருதய துடிப்பை கண்காணிக்கிறது. தேவையான நேரத்தில் மின்னேற்றத்தை கொடுக் கிறது. தினமும் கோவை அரசு மருத்துவமனையில் 3 முதல் 4 ஓப் பன் ஹார்ட் சர்ஜரி செய்கிறோம். அதே போல 18 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். அதன் மூலம் 57 பேருக்கு உடல் உறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூளைச்சாவு அடைவதை உறுதி செய்து சான்று வழங்க 18 மணி நேரம் வரை ஆகும். உறவினர் காவல் துறை ஒப்புதல் பெற்றே உடல் உறுப் புகள் தானமாக பெறப்படுகிறது. சென்னைக்கு நிகராக கோவையில் உடல் உறுப்பு தானம் பெறப்படுகி றது. மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு உள்ளது, என்றார்.
6 ஆண்டுகளில் 1100 அறுவை சிகிச்சைகள்
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக கடந்த ஆறு ஆண்டுக ளுக்கு முன்பு பணியில் சேர்ந்த மருத்துவர் பாலாஜி. எலும்பு சம்பந்தமான பிரச்சனை களுக்கு சிறு, சிறு அறுவை சிகிச்சைகள் செய்த இவர், இதுவரை 1100 எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளும், கடந்த ஒரே ஆண்டில் 344 அறுவை சிகிச்சைகளும் செய்து மாநில அளவில் அதிக அறுவை சிகிச் சைகள் செய்துள்ளார். அதிகளவில் அறுவை சிகிக்சைகள் செய்த முதல் தாலுகா மருத்துவமனையாக எடப்பாடி அரசு தலைமை மருத்துவமனையை தமிழக அரசு தேர்வு செய்து, மருத்துவர் தினத் தன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர் பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்து மாநில விருதும், கடந்த ஜன.26 குடியரசு தினத்தன்று மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்கு நர், மாநில விருதும் வழங்கினர். இதனைப்பெற்ற மருத்துவர் பாலாஜிக்கு எடப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்து வர் கோகுல் கிருஷ்ணன் உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.