சேலம், மே 5- நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில் நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும். நீல நிற அட்டை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா உள் ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் கோவிந்தன் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குணசேகரன். மாவட்ட துணைச் செயலாளர் அமலா ராணி, மாவட்ட பொருளாளர் கனக ராஜ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் செல்வம், ஓமலூர் தாலுகா செயலாளர் ஏழுமலை, தாலுகா தலைவர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.