சுற்றுலா சென்ற வேன் மரத்தில் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
நாமக்கல், ஆக.4- கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற வேன் மரத்தில் மோதி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லி மலைக்கு ஈரோடு மாவட்டம் முத்தூர் பகுதியில் இருந்து சுகுணா என்பவரின் தலைமையில் சுற்றுலா வேன் மூலம் 22 பேர் வியாழனன்று இரவு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலை யில், அரியூர் நாடு பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதியதில் ஓட்டு நருக்கு தலையில் பலத்த காயமும்,வேனில் பயணம் செய்த 10 பேருக்கு பலத்த காயமும்,ஒரு சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில் செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழவந்தி நாடு காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பெண்களிடம் நகை பறிப்பு
கோவை, ஆக.4- கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 6 பவுன் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை, வடவள்ளி, இடையர்பாளையம் சாலையை சேர்ந்தவர் நடராஜன் மனைவி மல்லிகா(57). இவர் தேவாங்க பேட்டையில் உள்ள பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மல்லிகா வேலைக்கு செல்வதற் காக பேருந்தில் தேவாங்கபேட்டை சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் மல்லிகா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர். இதேபோன்று, கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் நாரா யணசாமி மனைவி பிரேமலதா (57). இவர் வியாழனன்று தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென பிரேம லதா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், பீள மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.
சேலத்தில் ரூ.60 கோடியில் புதிய நீதிமன்றங்கள் கட்டும் பணி
சேலம், ஆக.4- ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்றங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளதாக சேலம் வழக்கறிஞர்கள் சங்த்தினர் தெரிவித்தனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்துசாமி, சேலத்தில் நீதிமன்ற வளாகத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்றங்கள் கட்டும் பணிக்கான அடிக் கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலர் கலந்து கொண்டு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவை துவக்கி வைக்க உள்ளனர். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராள மான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், சேலத்தில் இந்த நீதிமன்ற கட்டிடமானது வழக்கறிஞர் சங்கத்தின் பெரும் முயற்சிக்கிடையே அடிக் கல் நாட்டி நாளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது செயலா ளர் முத்தமிழ் செல்வன், பொருளாளர் பாபு, நூலகர் அசோக் குமார் உட்பட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.
முட்டை விலை உயர்வு
நாமக்கல், ஆக.4- நாமக்கல் மண்டலத்தில் ஆக.1 ஆம் தேதியன்று ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. இந்நிலை யில், வியாழனன்று நடை பெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை யின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.20 ஆக நிர்ண யம் செய்யப்பட்டது. இந்த விலை வெள்ளியன்று முதல் அமலுக்கு வந்தது.
வனப்பகுதியிலிருந்த கேமராக்கள் திருட்டு
கோவை, ஆக.4- வனவிலங்குகளை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏராளமான தானியங்கி கேமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இத னிடையே மேட்டுப்பாளையம் வனச்சரகம், உலிக்கல் சுற்றில் வனக்காப்பாளராக பணியாற்றி வருபவர் நாகராஜன் (37). இவர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் வனப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது கல்லாறு, புளியமரக்காடு உப்பு மண்குழி ஆற்றுப்படுகையில் வன விலங்குகளின் நடமாட் டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வனகாப்பா ளர் நாகராஜன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
கோவை, ஆக. 4- சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலதுபுறம் திரும்ப முயன்றபோது லாரி உரசியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழத்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வேலை செய்து முடித்துவிட்டு இரவு உணவு அருந்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்துள்ளார். கருமத்தம்பட்டி நான்கு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மின்தடை
திருப்பூர், ஆக.2- அவிநாசி துணை மின் நிலையத்தில் சனியன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் அவிநாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளை யம், கருமாபாளையம், செம் பியநல்லுார், சின்னேரிபாளை யம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங் கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், மடத்துப்பாளையம், சேவூர் சாலை, கைகாட்டிப் புதுார், சக்தி நகர், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநி யோகம் இருக்காது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினர் கைது
கோவை, ஆக.4- கோவையில் புரோஜக்ட் திட்ட விழிப்புணர்வு மூலம் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது சித் தப்பாவை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் துறை சார்பில், சிறுமிகளை பாலியல் வன்முறைகளை இருந்து காக்க புரோஜக்ட் பள்ளிக் கூட திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் பள்ளிகளுக்கு சென்று மாணவிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், துடியலூர் பகு தியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த கொரோனா கால கட்டத்தில் சிறுமி வீட்டிலிருந்த போது, அவரது சித்தப்பா சிறு மிக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அத்துமீறியுள் ளார். ஆனால், சிறுமி நடந்தது என்ன என்று தெரியாமலேயே இருந்துள்ளார். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளிக்கூடத்தில், புரோஜக்ட் பள்ளிக்கூட திட்டம் மூலம் போலீசார் விழிப்புணர்வு நடத்தினர். அதில், மாணவி களிடம் குட் டச், பேட் டச் என்றால் என்ன? பாலியல் அத்து மீறலால் பாதிக்கப்பட்டால் தயங்காமல் புகார் அளிக்க வேண் டும் என தெரிவித்துள்ளனர். அப்போதுதான் சிறுமிக்கு தனது சித்தப்பா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரி யவந்தது. ஆனால், அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந் துள்ளார். இதற்கிடையே சிறுமி கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று தனது சகோதரியுடன் பாட்டி வீட்டுக்கு சென்றார். அதன் அருகே உள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்றபோது, அவர் மீண்டும் மாணவியை தகாத நோக்கத்தில் அணுகியுள்ளார். இதனை சிறுமி கண்டித்துள்ளார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட் டது. அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் அத்துமீறிய அவரது சித்தப்பாவை கைது செய்தனர்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் அச்சம்
ஈரோடு, ஆக.4- தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்க ளில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி என ஏராள மான வனவிலங்குகள் உள்ளன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அவ்வபோது விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் ஜூர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதி யிலிருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் ஊருக் குள் புகுந்து விவசாய தோட்டத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில், தாளவாடியை அடுத்த திகனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (41). விவசாயியான இவர், வியாழனன்று இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன்பு சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்துள் ளார். அப்போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட் முன்பு சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனே முருகன் வீட்டின் கதவை மூடிவிட்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, தனது செல்போனில் சிறுத்தையை படம் எடுத்தார். சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த சிறுத்தை, அருகிலுள்ள கரும்பு காட்டுக்குள் சென்று பதுங்கியது. கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை எந்நேரமும் மீண் டும் ஊருக்குள் வரலாம் என்பதால், பொதுமக்கள் பெரும் அச் சத்தில் உள்ளனர். எனவே, உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதி யில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.
தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
கோவை, ஆக.4- தேங்காய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தேங்காய் விலை வீழ்ச்சி கொப்பரைத் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்து வதற்கு விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த னர். அருகில் உள்ள சந்தைப்பேட்டை முன்பாக போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்த முயன்ற போது, போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக் குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதியை மீறி விவசாயி கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
வரத்து அதிகரிப்பு: தருமபுரியில் தக்காளி விலை குறைந்தது
தருமபுரி, ஆக.4- தருமபுரியில் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், ஏறு முமாக சென்று கொண்டிருந்த தக்காளி விலை சற்று குறைந் துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அள வுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதி கரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால், இம் ்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக் கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற் பனை செய்யப்பட்டு வந்தது. ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனையானது. சில்லரை விற் பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக் காளி விலை தொடர்ந்து 40 ஆவது நாளாக உயர்ந்து வருவ தால், மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் ரேசன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தருமபுரி யில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, உழவர் சந்தையில் ரூ.68க்கு விற்ற நிலையில் தக்காளி, வெள்ளியன்று சற்று விலை குறைந்து ரூ.40 முதல் 50க்கு விற்பனை செய்யப் படுகிறது. இதனால் ரேசன் கடைகளில் வழங்கப்படும் தக் காளி நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி விலை குறைந்தாலும், வெளிமார்க்கெட்டில் விலையை குறைக்க வியாபாரிகளுக்கு மனம் இல்லாததால் கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவை, ஆக.4- பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள், மார்க்கெட் சாலையிலுள்ள ஒரு கடை யில் திடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக் கப்பட்டிருந்த, 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விற் பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்ச ரிக்கை விடுத்தனர்.