சேலம் மாவட்டம், தும்பிப்பாடி பகுதியில் வழித்தடப் பிரச்சனைக்காக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் விடுதலை பெற்று தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில் சிபிஎம் ஓமலூர் செயலாளர் என்.ஈஸ்வரன், தும்பிப்பாடி கிளைச் செயலாளர் பி.முருகன், வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.