districts

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்து ஏறுவதற்கான நகரும் இரும்பு சாய்வு தளம் சீரமைக்கப்படுமா?

கும்பகோணம்,  ஜூன் 17 - கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்து ஏறுவதற்காக வைக்கப்பட்டுள்ள நகரும் இரும்பு சாய்வு தளம் எப் போது சீரமைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  தஞ்சை, கும்பகோணம் என  இரண்டு மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோ ணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.  கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோ ணத்தைச் சுற்றிலும் நவக் கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல் பெற்ற  கோவில்கள் உள்ளன. முருக னின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது.

ஆன்மிகத் தல மாக விளங்கும் கும்ப கோணத்திற்கு தமிழகம்  மட்டுமின்றி வெளி மாநி லங்களில் இருந்தும், நாள்தோறும் ஏராளமானோர்  வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பேருந்து  போக்குவரத்து வசதியாக இருப்பதற்காக, கும்பகோ ணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன. இந்த  பேருந்துகள் வந்து செல்வ தற்கு வசதியாக, கும்பகோ ணம் மாநகரின் மையப் பகுதி யில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கி ருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை, திருப்பதி, பெங்க ளூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகள் மூலம்,  தினமும் ஆயிரத்திற்கு மேற் பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்பவர்களில் முதியவர்கள், மாற்றுத்திற னாளிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் சில  அடிப்படை வசதிகள் செய் யப்பட்டுள்ளன.

அதிலும்  குறிப்பாக மாற்றுத்திறனாளி கள் பேருந்து ஏறி இறங்கு வதற்கு வசதியாக, இரும்பி னால் ஆன நகரும் சாய்வு  தளம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் சாய்வுதளம் மூலம் பேருந்து களில் ஏறி, இறங்க வசதி யாக இருந்தது. பேருந்து  நிலையத்தில் அமைக்கப் பட்ட இந்த சாய்வு தளத்தை எந்த இடத்திற்கும் தள்ளிச் செல்லலாம். இதனை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த சாய்வு தளம் நீண்ட நாட்க ளாக பராமரிப்பின்றி சேத மடைந்து காணப்படுகிறது.

சாய்வு தளத்தில் உள்ள  இரும்பு துருப்பிடித்து உள்ளது. இந்நிலையில், இதைப் பயன்படுத்த முடியா ததால் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறி இறங்கு வதற்கு பெரிதும் சிரமப்படு கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுத்து, பேருந்து  நிலையத்தில் மாற்றுத்திற னாளிகள் வசதிக்காக அமைக் கப்பட்ட சாய்வு தளத்தை சீர மைத்து மீண்டும் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள்  மற்றும் மாற்றுத்  திற னாளிகள் எதிர்பார்க்கின்ற னர்.