கிருஷ்ணகிரி, ஜன. 16- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம் சிகரளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பள்ளம், பஞ்சுகுட்டியூர், பாடர், காட்டூர் ஆகிய கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ள நிலையில், மாவட்ட கனிம வளத்துறையின் கணக்குப்படி கடந்த பத்து ஆண்டுகளில் அரசு அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பர்கூர் வட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குன்றுகள் குவாரி களால் தகர்க்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் மிகப்பெரிய பள்ளங்களாக காட்சியளிக் கின்றன. இந்நிலையில் தண்ணீர் பள்ளம் கிராம மக்கள் வெள்ளிக் கிழமை (ஜன. 13) முதல் திடீரென கல் குவாரிக்கு வரும் லாரி களை மறித்து சாலை மறிய லில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுவதாவது:- ஒரு முக்கியமான கட்சிக்கார ருக்கு சொந்தமான கல் குவாரிக்கு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் 24 மணி நேரமும் வந்து செல்கிறது. இதனால் இந்த கிராமத்தின் சாலைகள் குண்டும் குழியு மாக மாறி விட்டன. மேலும் சாலை நெடுகிலும் ஜல்லி கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக் கின்றனர். டிப்பர் லாரிகள் வேக மாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்க ளில் பாறை மண் படிவதால் விவசாயமும் பாதிக்கப்படு கிறது. மேலும் பெரிய இயந்தி ரங்கள் மூலம் பாறைகளுக்கு ஓட்டை போடுவது, வெடி வைத்து வெடிக்க செய்வது மற்றும் லாரிகள் எந்த நேரமும் இயக்கப்படுவதால் இரவில் தூங்க முடியவில்லை. கடும் அதிர்வு ஏற்படுவதால், பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள் ளது. அதிலிருந்து பறக்கும் தூசி களால் மக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கனிம வளத்துறையும் இருப்பதாகவே தெரியவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பல முறை புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இந்த பாதை வழியாக கல்குவாரிகளுக்கு வாகனங்கள் செல்லக்கூடாது. வெடி வைப்பதை நிறுத்த வேண்டும், விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளுக்கும், விவசாய பாதிப் பிற்கும் உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். மேலும் அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.