புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், மகாலிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், இடைக்குழு செயலாளர்கள் தேவராஜ், முனியப்பா, பெரியசாமி, சீனிவாசன், சபாபதி, சாமு வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் லெனின் முருகன்,நாராயண மூர்த்தி அண்ணாமலை, மாதர் சங்கர் மாவட்டத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.