districts

img

நூலகத்தை புதுப்பிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 27- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் சுற்று வட்டார பகு திகளில் ஞாயிற்றுக் கிழமை இரவு இடி மின்னல் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து  மத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள  நூலகத்திற்குள் தேங்கி நிற்கிறது. புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது. மேலும் நூலகத்திற்கு செல்லும் வழியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே நூலகத்திற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி, புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.