கிருஷ்ணகிரி, நவ. 24- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப் பள்ளி அருகே உள்ள தேவசானபள்ளி கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் ரேகா, மாவட்ட பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேஷ் வாழ்த்திப் பேசினார். தேவசான பள்ளி கிராமத்தில் மயானம், பொது கழிப்பறை, தெருகளுக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தித் தர வேண்டும், ஆரம்ப சுகாதார நிலை யம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத் தலைவராக சுமித்ரா, செயலாளராக பிரேமா, பொருளாளராக நாகவேணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.