districts

அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானை பலி

கிருஷ்ணகிரி, பிப். 3- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரத்திற்குட்பட்ட தக்கட்டி செல்லும் சாலையில் உள்ளது. உப்பராணி காப்பு காடு  அங்கு வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவர் கள், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சென்று யானையின் உடலை மீட்ட னர். பின்னர் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே யானையின் உடல் புதைத்தனர். யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வனத்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சி காப்புக் காட்டில் ஆண் யானை ஒன்று மற்ற யானையுடன் மோதிக்கொண்டதில் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.