கிருஷ்ணகிரி,நவ 20- கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயலட்சுமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் துவக்க உரையாற்றினார். மாநிலத் தலைவர் எம். அன்பரசு நிறை வுரையாற்றினார். இணைச் செய லாளர் ஜெகதாம்பிகா நன்றி கூறி னார். இணைச் செயலாளர் கல்யாண சுந்தரம், பொருளாளர் கோவிந்தராஜ், வேலை மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் நடராஜன், துறை வாரி சங்க நிர்வாகிகள் சரவணன், தேவிசோனா, ஹேமானநந்தினி, வெங்கடேசன், பெருமாள் வாழ்த்திப் பேசினர். தமிழக அரசு வெளி முகமை மூலம் அரசு பணிக்கு ஆட்களை நியமிக்கும் அரசாணை நிலை எண் 115, மாநகராட்சி நகராட்சிகளில் பணிபுரியும் அடிப்படை ஊழி யர்களை அத்துக்கூலிகளாக மாற்றக்கூடிய அரசாணை எண் 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி,சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு,அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய பிரிவின ருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிதி செலவினம் இல்லாத சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.