districts

img

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஓசூர்!

கிருஷ்ணகிரி, ஜூலை 14- ஓசூரில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நெருக்கம்,வாகன நெரிசல் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.  ஓசூர் மாநகராட்சிக்குள் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் இங்குள்ள தொழிற்சாலை கள், அலுவலகங்கள் செல்ல பயணிப் பவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள்,  தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள், 20 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின்  நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் என காலை மாலை வேலைகளில் ஓசூர்  நகரம் கடும் நெரிசலில் சிக்கி தினமும் திணறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இவற்றை ஒழுங்கு படுத்துவதற்கு போதுமான போக்குவரத்து காவலர் கள் இல்லாதநிலை உள்ளது குறிப் பாக போக்குவரத்து காவல்துறை அலுவலகம் அருகில் பாலத்தின் அடி யில் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தி லும், உள் வட்டச் சாலை துவங்கும் சீதாராம் மேடு பழைய பேருந்து நிலை யம் அருகிலும், இணையும் இஎஸ்ஐ மருத்துவமனை அருகிலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

ஓசூரில் இருந்து கிழக்கு சாலை யில் அதியமான் பொறியியல் கல்லூரி வரையிலும், மேற்கே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சுங்கச் சாவடி வரையிலும் 6 கிலோ மீட்டர்  தூரத்திற்கு தினமும் காலை மாலை  இரு வேலையும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

வாகனங்களின் சிறு சிறு பிரச்சனை கள், விபத்துக்கள், குறுக்கீடுகள்  காரணமாகவும், தொழிற்சாலை களுக்கு பொருள்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள்நகரச்சாலையின் இரு  புறமும் பல மணி நேரம் வரிசை  கட்டி நிற்பதாலும், மேம்பாலங்களின்  கீழ் 3, 4 சாலைகள் இணையும்  இடங்களில் வாகன போக்குவரத்தை ஒழுங்கு படுத்தப்படாததாலும், நெரிசல் ஏற்படுகிறது. சிப்காட் 1 சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி துரிதமாக நடத்தப்படாமல்,பல மாதங்களாக வேலையும் நடக்காமல் தேங்கி நிற்கிறது.

இதனால் குறிப்பாக திங்கள்,சனி ஆகிய  நாட்களில் கடந்த ஓராண்டாக நெரிசல்களைக் கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்தை நெறிப்படுத்த 10 இல் ஒரு பங்கு கூட போக்குவரத்து காவலர்கள் இல்லை என போக்கு வரத்து காவல்துறையினரே கூறுகின்றனர். எனவே உடனடியாக போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்,

நெருக்கடியான சாலை களை விரிவுபடுத்த வேண்டும் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள  நகர சாலைகளில் பல நாட்களாக நிற்கும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். சாலைகளின் இருபுறமும் வரிசை கட்டி நிற்பதற்கு அனுமதிக்க கூடாது, நெரிசலை சீர்படுத்திட உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- ஒய்.சந்திரன்