districts

img

விலை சரிவால் முள்ளங்கியை சாலையோரம் கொட்டும் அவலம்

கிருஷ்ணகிரி, பிப். 9- விலை குறைவால், ஓசூர் பகுதி விவசாயிகள் சாலையோரங்களில் முள்ளங்கியை கொட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே  ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, நந்திமங்கலம், சென்ன சந்திரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுகிய  காலத்தில் விளையும் முள்ளங்கி, தக்காளி, கீரை, கொத்த மல்லி உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகள வில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடையா கும் காய், கீரைகள் பெங்களூரு, சேலம், கோவை, ஈரோடு  உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. இதில் குறிப்பாக 45 நாட்களில் அறுவடை செய்யும் முள்ளங்கி இப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முள்ளங்கி மகசூல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம்  கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையான நிலையில்,  தற்போது 3 முதல் 6 ரூபாய்க்குதான் விற்பனையா கிறது. இதனால் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விளை நிலங்களில் அப்படியே விட்டுள்ளனர். மேலும், அறுவடை செய்யும் முள்ளங்கிக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.