districts

img

சிறு குறு விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூர் அருகே எடப்பள்ளி,சூதாளம், இடையநல்லூர் பகுதிகளில் சிறு குறு விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டத் தலைவர் திம்மா ரெட்டி தலைமையில் செவ்வாயன்று (ஜூன்11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன்,மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்படும் நிலங்களை  வரும் 14 ஆம் தேதி நேரடியாக ஆய்வு செய்வதாகவும், அதன் பிறகு இதுகுறித்து பேசலாம்,அதுவரை கெயில் பணிகள் எதுவும் நடைபெறாது என உறுதி அளித்தார்.