districts

img

அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி,பிப் 12. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி  ஞாயிறன்று (பிப்.12)நடை பெற்றது.  செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்  அறங்காவலர் மருத்துவர் லாசியா வரவேற்றார்.  இக்கல்வி குழுமங்களின் நிறுவனர் முனைவர் தம்பி துரை தலைமை உரையாற்றி னார்.   மின்சார வாகனங்கள் புதிய மின்கலங்கள் தரவு களின் அடிப்படையில் தீர்வுகள், செயற்கை நுண்ணறிவு, மனிதருடன் இணைந்து செயல்படும் ரோ போடிக்ஸ் போன்ற புதிய சூழலில் பொறியியல் பாடத் திட்டத்திற்கு மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்தி னார். பெங்களூருவில் செயல்படும் மின்னணு நிறுவன தலைவர் கே கிருஷ்ணமூர்த்தி, பைஸ் ஸ்கொயர் டெக்னாலஜிஸ் நிறுவன முதன்மை அதி காரி சீனிவாசராஜூ கலந்து கொண்டு பேசுகையில்  மின்சார வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாட்டில் மென்பொருளின் பங்கு குறித்து விளக்கினர். சிலிக்கான், சில்லு போன்ற பிரிவுகளில் பொறியியல் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.   தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் இன்னும் 25 ஆண்டுகளில் குறைந்து விடும். மின் வாகனங்களின் முதன்மை பெற்ற பின்னர் மின்சார வாகனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை தோன்றும். லித்தியம், அயான், மின்கல உற்பத்தி, மின்கலத்தை பயன்படுத்துவதால் தோன்றும் வெப்பத்தை கட்டுப்படுத்துதல் முயற்சி, ஆகிய பிரிவுகளில் மனித ஆற்றல் தேவைப்படும். தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் திறன் மேம்பட தொழில் நிறு வனங்களுடன் இணைந்து பாடத்திட்டத்தினை தயாரிக்க வேண்டும். மாண வர்களின் தொழில் திறனை மதிப்பிட தொழில் நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னர்.   இக்கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக சென்னை செயின்ட் பீட்டர்ஸ் நிகர் நிலை பல்கலைக்கழகம், அதியமான் பொறியியல் கல்லூரி, மற்றும் கோயம் புத்தூர் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி இணைந்து  மாணவர்களின் திறமையை மேம்படுத்த திறன் பயிற்சி மையங்கள் அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.