கிருஷ்ணகிரி, ஜன. 17- ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தில் வாலிபர் சங்கம் உதயமான காலத்தி லிருந்து கெலமங்கலம் பகுதி செய லாளராக இருந்து சங்கத்தை உரு வாக்கியதுடன் கந்துவட்டி, கள்ளச் சாராயத்தை எதிர்த்தும் மக்களின் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்கவும் போராடி வந்தார்.
இதனால் 1991 ஜனவரி 17 ஆம் தேதி கள்ளச்சாராய கந்து வட்டி கும்பல் அனுசோனையில் அவர் வீட்டுக்குள் புகுந்து கொடூர மாக வெட்டி கொலை செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 33 ஆம் ஆண்டாக தியாகி ஆதித்யவர்த்தன ஸ்ரீ நினைவிடத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கி னார்.
மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பி னர்கள் சேகர்,இருதயராஜ், சுரேஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர்.தளி ஒன்றிய செயலாளர் வெங்க டேஷ்,மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் ஓசூர் வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முரு கேஷ்,நடராஜன் சிவப்பா கலந்து கொண்டனர்.