காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்துள்ளது. பட்டாசு ஆலையில் உள்ள குடோனில் இன்று மதியம் திடீரென பலத்த சத்ததுடன் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.10 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.