கள்ளக்குறிச்சியில் நேர்ந்துள்ள உயிரிழப்புகளுக்கு காரணமான விஷச்சாராயத்தை தடுத்து நிறுத்த தவறிய காவல்துறையை கண்டித்தும், தமிழகத்தில் முற்றாக கள்ளச்சாராயத்தை ஒழித்திட கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்று (ஜூன் 21) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. முன்னதாக வியாழனன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநில உதவிச் செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவர்கள் தெய்வானை, உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.