districts

img

ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு மனுக்களுடன் போராட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.28- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை மேற்கு ஒன்றியம், கூத்தனூர் கிராமத்தில் 100 நாள் வேலை, தெரு மின்விளக்கு, குடிநீர், குடியிருக்கும் இடத்திற்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கூத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர். ஏ.ரகு ராமன், சு.செல்வராஜ், பச்சையப்பன், மு.ஜெயமூர்த்தி, மு.அஞ்சலை.உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அமைதி பேச்சு நடந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய்வாளர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.