கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அம்மையகரம், ராயப்பனூர் மற்றும் கனியாமூர் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன். இந்திராணி, ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் அன்பு மணிமாறன். உதவி செயற்பொறியாளர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.