districts

img

கள்ளச்சாராய வியாபாரிகளை கைதுசெய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவொற்றியூர் எண்ணூர் பகுதிக் குழு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், பகுதி தலைவர் அலமேலு, செயலாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் செல்வகுமாரி, கே.கே.புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.