கள்ளக்குறிச்சி, ஜன. 7- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்க ளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீர் நிலைகள் குறித்தும் கணக்கெடுத்து அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறை அலுவலர்கள் காவல்துறையுடன் இணைந்து அகற்ற வேண்டும். பத்திரப்பதிவுத்துறை பதிவுக்கு வரும் நிலங்களை ஆய்வு செய்து, நீர்நிலை ஆக்கிர மிப்பு அல்லாத நிலங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை ஆகியவை நீர்நிலைகளின் எல்லைகளில் மரக்கன்றுகளை நட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் புதிய நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் விரைந்து அகற்றப்பட்டு எதிர்வரும் காலங்களில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக, மின் இணைப்பு, குடி நீர் இணைப்புக் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை ஆராய்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குட்பட்டதாக இருந்தால் எந்த இணைப்புகளும் வழங்கக் கூடாது எனவும் மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களையும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.