districts

திருச்சி முக்கிய செய்திகள்

மார்ச் 21 குறைதீர் கூட்டம்

கரூர், மார்ச் 16 - தமிழக முதல்வரின் ஆணைப்படி, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் திங்கட்கிழமை (மார்ச் 21) முதல் மக்கள்  குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம்,  பொதுமக்கள் தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடித் தும், முகக்கவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தவறாது தங்களது ஆதார் அட்டை  மற்றும் கைப்பேசி எண்ணுடன் வந்து தங்களது புகார்களை  பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இடுபொருட்கள் வழங்கல்

பாபநாசம், மார்ச் 16 - பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வேளாண் விரிவாக்க  மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாபேட்டை வட்டார அட்மா திட்ட சேர்மன் தியாக சுரேஷ், உளுந்து விதை,  பயறு நுண்ணுரம், உயிர் உரங்கள், பனை விதைகள், பண்ணைக்கருவிகள், ஜிப்சம், சிங்க் சல்பேட் ஆகிய இடுபொ ருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசு கையில், தற்போது கோடை பருவத்தில் உளுந்து, எள்ளு ஆகிய மாற்றுப்பயிர்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும். இயற்கை முறை பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாறினால் அதிக லாபம் ஈட்டலாம் என்றார். அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா, கண்காணிப்பாளர் கமலா, வேளாண்  அலுவலர் மனோகரன் கலந்து கொண்டனர்.


பாபநாசம் எம்எல்ஏ ஆய்வு

மெலட்டூர், மார்ச் 16 - மெலட்டூர் அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் கொத்தங் குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  அப்பகுதி பொது மக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந் தார். அவர்கள், தரமான சாலை வசதி மற்றும் புதிதாக மின்  கம்பங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலை வர் கலைச்செல்வன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், மமக மாநில அமைப்புச் செயலாளர் பாதுஷா, மாவட்ட  தலைவர் ரஹ்மத் அலி, அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆனந்த்ராஜ், முருகன் உடனிருந்தனர்.


சேதுபாவாசத்திரத்தில் இன்று மின்தடை

தஞ்சாவூர், மார்ச் 16 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் துணை மின்  நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்ப தால் நாட்டாணிக்கோட்டை, ஆதனூர், பேராவூரணி பகுதியில்  சேதுசாலை, கழனிவாசல், பூக்கொல்லை, கள்ளம்பட்டி, தில்லங் காடு, ஒலிராமன்காடு, பள்ளத்தூர், இரண்டாம்புளிக்காடு, நாடியம், மல்லிப்பட்டினம், உடையநாடு, வீரியங்கோட்டை, துறையூர், மரக்காவலசை ஆகிய பகுதிகளில் மார்ச் 17 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை  மின் வினியோகம் இருக்காது என பேராவூரணி உதவி செயற் பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


வழி தவறி வந்த மூதாட்டி  உரியவரிடம் ஒப்படைப்பு  

அரியலூர், மார்ச் 16 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த எடமேலை யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்சியம். மூதாட்டியான இவர்  வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவர்.  இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்தில் பயணித்த அவர் தவறுதலாக மாற்று பேருந்தில் ஏறி விட்டதாக  தெரிகிறது. வழி தவறி வந்த மூதாட்டியை அரசு பேருந்து நடத்து நர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் தலைமை  காவலர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் ஆகி யோர் தலைமையிலான போலீசார் வழிதவறி தவித்து வந்த  மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.  இதில் அவரது அடையாள அட்டையில் உள்ள முக வரியை கொண்டு உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரி வித்தனர். பின்னர் தா.பழூர் காவல்நிலையத்திற்கு வந்த உறவி னர்களை உறுதி செய்த போலீசார், அவர்களிடம் மூதாட்டியை  ஒப்படைத்தனர். மூதாட்டியை உரிய நேரத்தில் உறவினரிடம் ஒப்படைத்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு  

தஞ்சாவூர், மார்ச் 16 - பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக சமூக ஆர்வலர்  மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய  கிழக்கு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டை நெருங்கும் நிலையில் உள்ளது. பல்வேறு மருத்துவர்கள், பொறி யாளர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்களை உரு வாக்கிய இப்பள்ளிக்கு, பள்ளியின் பெற்றோர்களே, பெற்றோர்  ஆசிரியர் கழக பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்  என பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு த.பழனி வேல் என்பவர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக தேர்வு  செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மகள் ஐந்தாம் வகுப்பு  முடித்து வேறு பள்ளிக்குச் 6 ஆம் வகுப்பு படிக்கச் சென்று விட்ட தால் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.  இதையடுத்து தற்போது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவராக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், துணைத்  தலைவராக தெ.சூர்யா, பொருளாளராக ம.முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பள்ளி மேலாண்மை  குழு தலைவராக ப.சரண்யா, துணைத் தலைவராக இரா.மஞ்சுளா மற்றும் 18 நபர்கள் கொண்ட பொறுப்பாளர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.