districts

img

எல்ஐசி கரூர் கிளைகள் தீக்கதிர் சந்தா வழங்கல்

கரூர், ஜூலை 14 - அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் கரூர் கிளைகள் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.

எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகிகள் கணேசன், சிவராமகிருஷ்ணன், பெரு மாள், முத்துக்குமார் மற்றும் பாலபிரபு ஆகியோரின் முன்முயற்சியால், கரூர் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் யூனிட் 1 சார்பாக 9 ஓராண்டு சந்தா, யூனிட் 2 சார்பாக 14 சந்தா (11 ஓராண்டு சந்தாவும், 3 அரையாண்டு சந்தாவும்) என மொத்தம் 23 சந்தாவிற்கான தொகை ரூ.43,150-ஐ சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.