districts

ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி ஏழை மக்களின் பணம் மோசடி குற்றவாளிகள் கைது கோரி நாளை சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.3 - ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்த நபர்களை பாதுகாக்கும் கரூர் மாவட்ட காவல்துறைக்கு கண்டனமும்,  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை, பெட்ட வாய்த்தலை, தோகைமலை, கடவூர், தரகம்பட்டி பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ  முருகா சிட்ஸ் நிறுவனத்தை 10 பேர்  கொண்ட குழுவினர் நடத்தி வந்துள்ள னர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி யைச் சேர்ந்த இவர்கள் இயக்குநர்களா கவும், மேலாளர் மற்றும் உரிமை யாளர்களாகவும் உள்ளனர்.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் ரூ.50 ஆயிரம் முதல்  50 லட்சம் வரை ஏலச் சீட்டு நிறுவனம்  நடத்துவதாக கூறி நாள்தோறும், வாரம்தோறும், மாதம் தோறும் என  பல நிலைகளில் பணம் வசூல் செய்து உள்ளனர். கடந்த ஒரு வருடமாக வசூ லித்து வந்த பணத்தை பொதுமக்க ளுக்கு திருப்பி கொடுக்காமல் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டு, தீபாவளி பண்டிகைக்கு முன்பு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் கூலி வேலை செய்து சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததை அறிந்து பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். திட்டமிட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிறுவனத்தின் உரிமை யாளர் வினோத் உள்ளிட்ட அனைவரை யும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி னார். ஆனால் இன்றுவரை ஏழை,  எளிய மக்களின் சீட்டுப் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய நிறுவனத் தின் உரிமையாளர்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். கரூர் மாவட்ட காவல் துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.  

கரூர் மாவட்ட காவல்துறையும், கரூர் மாவட்ட நிர்வாகமும் குற்ற வாளிகளை கைது செய்யாமல் அலட்சி யமாக செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து, பொதுமக்கள் செலுத்திய சீட்டு பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இதனை வலியு றுத்தி கட்சியின் குளித்தலை ஒன்றியக்  குழு சார்பில் டிச. 5 அன்று குளித்தலை  பேருந்து நிலையம் முன்பு மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.