districts

img

பட்டாவிற்கான இடத்தை வழங்காமல் கால தாமதம் வி.தொ.ச போராட்டம்: ஆட்சியர் பேச்சுவார்த்தை

கரூர், ஏப்.26 - கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் வட்டம் கொம்பா டிப்பட்டியில் வசித்து வரும்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு  ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறையினர் சார்பில் குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு பட்டாவுக்கான இடத்தை  சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் கிராம வட்ட கணக்கில் போக்குவரத்து செய்து, அளந்து, அத்து காட்டாமல் ஏமாற்றி வந்துள் ளனர். குடிமனைப் பட்டாவிற் கான இடத்தை உடனடியாக அடையாளம் கண்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணராயபுரம், குளித் தலை ஆகிய வருவாய்த் துறை அலுவலகங்கள் முன்பு  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் கரூர் மாவட்ட நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தி வருவதை கண்டித் தும், உடனடியாக நிலத்தை வழங்கிட வேண்டும் எனக் கோரியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  குடும்பத்துடன் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தின் மாநில செயலாளர் அ. பழநிசாமி தலைமை வகித் தார். அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் போராட்டத்தை  துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர்  மா.ஜோதிபாசு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விதொச மாநில குழு உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்ட செய லாளர் இரா.முத்துசெல்வன், மாவட்ட தலைவர் கண்ண தாசன் உள்ளிட்ட நூற்றுக்கும்  மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். சுமூக பேச்சுவார்த்தை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.தா.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற சுமூக பேச்சுவார்த்தையில், ‘இன்னும் ஒரு வாரத்திற்குள், நிலத்தை ஆய்வு செய்து உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என முடிவு  செய்யப்பட்டது. இதனை யடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த னர். இதில் மாவட்ட வரு வாய் அலுவலர், கரூர் டிஎஸ்பி உள்ளிட்ட அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.