கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சேரன் பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளியின் முதல்வர் வி.பழனியப்பன் தலைமை வகித்தார். தாளாளர் கே.பாண்டியன் புத்தக அரங்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் பாரதியார் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியரின் முகமூடிகளை அணிந்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜான்பாட்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.