districts

img

குமரியில் கனமழை - 2 பேர் பலி

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழையை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரியின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உயர்ந்து உள்ளது.    

பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலைக் கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.    

மேலும் மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனை அடுத்து குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

;