கடலூர்,டிச.29- அரசியலும், வரலாறும் தெரியாமல் அறிக்கைவிட்ட பாமக கடலூர் (தெற்கு) மாவட்டச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையின் சுருக்கம் வருமாறு :- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனத்திற்கு நிலம் கொடுத்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, விசிக, தமிழர் வாழ்வுரிமை, மனித நேயமக்கள் கட்சிகள் சார்பில் டிசம்பர் 26 அன்று நெய்வேலியில் பிரமாண்ட ஊர்வலம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனின் பேச்சைத் தவறாகச் சித்தரித்து கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 1935 ஆம் ஆண்டு நெய்வேலி கிராமத்தில் தெற்கு பகுதியில் வசித்து வந்த ஜம்புலிங்க முதலி யார் தனது சொந்த இடத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது தான் பழுப்பு நிலக்கரி அகப்பட்டது. அமெரிக்க உள்ளிட்டபல நாடுகளுக்குச் சோதனைக்கு அனுப்பப் பட்டது. ஆனால், இதில் மின்சாரம் தயாரிக்க முடியாது என்று பல நாடுகள் நிராகரித்தன. ஆனாலும், கம்யூனிஸ்ட்டுகள்தான் அந்த பழுப்பு நிலக்கரியை ரஷ்யாவுக்கு அனுப்பி ஆய்வு செய்து உண்மைத் தன்மையை வெளிக் கொணர்ந்தனர். அன்றைய தலைவர் தோழர் பி.ராமமூர்த்தியின் தொடர் முயற்சியால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னெடுப்பில் 1956 ஆம் ஆண்டு என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம் துவக்கப்பட்டது.
அந்த ஆண்டிலிருந்து இந்த நாள் வரை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கால் படாத இடமே இல்லை. நெய்வேலி பகுதி யில் என்.எல்.சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியதை வரலாறு கூறும். ஆனால், இந்த வரலாறு ஏதும் தெரியாத பாமக மாவட்டச் செய லாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய நியாயமான எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. தனது தலை மைக்கு மீது விசுவாசத்தைக் காட்ட நினைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் தமிழ்நாட்டில் மிக மோசமாகச் செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அன்புமணியின் பெயர் இடம் பெற்றுள்ளது. 15விழுக்காடு மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார் எனவும், இந்த ஆண்டு வெறும் 2 விவாதங்களின் போது மட்டுமே அவையில் இருந்துள்ளார் எனவும். அப்போதும் எந்த கேள்வி யையும் கேட்கவில்லை. தனிநபர் மசோதாவையும் கொண்டு வரவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தான் கே.பாலகிருஷ்ணன் கேள்வியாக எழுப்பினார். இதில் என்ன தவறு? பா.ம.க தலைவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா என்ன? 1952 ல் நிலம் கொடுத்த விவ சாயி களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக 60 வருடங்கள் கடந்து என்எல்சி தலைவர் அறிவிக்கிறார். என்எல்சி நிறுவனம் 1979க்கு பிறகு 27 ஆயிரம் பேரிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி வெறும் 1,837 பேருக்குத்தான் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.
அதுவும் 1990ம் ஆண்டு இந்தப் பகுதி மக்களைத் திரட்டி போராடி நீதி மன்றத்திற்குச் சென்றதன் விளை வாக வழங்கப்பட்டன. இந்த போராட் டத்தில் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்ற தையும் பெருந்தன்மையுடன் தோழர் கே.பி குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் பாமக இடம்பெற்றிருந்தபோது அக்கட்சியின் சார்பில் நிலக்கரி துறை அமைச்சராக என்.டி சண்முகம் இருந்துள்ளார். பல அமைச்சர்கள் இருந்துள்ளனர் நினைத்திருந்தால் இப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்த்திருக்க முடியும். நெய்வேலியில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காகவும், கடலூர் மாவட்ட உழைப்பாளி மக்களுக்காகவும், காவல் நிலைய அத்துமீறல்களை எதிர்த்தும் தோழர் கே.பாலகிருஷ்ணன் இம்மாவட்டத்தில் நடத்திய போராட்ட வரலாறு அறியாத இளம் வயது பா.ம.க மாவட்டச் செயலாளர் தனது தலைமையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. கடலூர் மாவட்டத்தில் கடலோர மக்கள் பாதிக்கப்பட்ட போதும், விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைக்காக, வி.கே. டி சாலைக்காக நிலமெடுத்த போதும், கரும்பு விவ சாயிகள் பாதிக்கப்பட்டபோதும், நூறு நாள் வேலைத் திட்ட முறைகேடுகளை எதிர்த்தும், நீர் நிலை ஆக்கிரமிப்பு என அப்பாவி மக்கள் அகற்றப்படும் போதும், வீட்டுமனைப் பட்டா இல்லாத மக்களுக்காகவும், ஆணவ படு கொலைகளுக்கு எதிராக, காவல் நிலைய அத்துமீறல்களுக்கு எதிராக, மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தினம் தினம் மாவட்டத்தில் செங்கொடியுடன் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் போராடிக்கொண்டே இருக்கின்றனர். இத்தகைய பிரசினைகளுக்கக நடக்கும் போராட்டங்களில் எங்கும் பா.ம.க கொடியைப் பார்த்ததாக யாரும் கூற முடியாது என்பதுதான் யதார்த்தம். எனவே பா.ம.க தலைமை தனது மாவட்டச் செயலாளர்களுக்கு வர லாற்றையும், அரசியலையும் போதிப்பது தான் இத்தகைய சிறு பிள்ளைத்தனமான அறிக்கைகள் வெளிவராமல் இருக்கச் செய்யும் உதவியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.