districts

img

ஆன்-லைன் பதிவை எளிமையாக்க உழைக்கும் பெண்கள் வலியுறுத்தல்

கடலூர், ஏப். 27- ஆன்-லைன் பதிவை எளிமையாக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டுமான உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட கன்வீனர் எம்.மனோ ரஞ்சிதம் தலைமையில் மாவட்ட மாநாடு நடை பெற்றது. இணை கன்வீனர் தனம் வர வேற்றார். மாநில அமைப்பாளர் ஜே. லூர்துரூபி மாநாட்டை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனி வேல், மாவட்டச் செயலாளர் பி.கருப்பை யன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் வி.கிருஷ்ண மூர்த்தி, உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வீனர் சாவித்திரி, இணை கன்வீனர் சாந்தகுமாரி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் கே.சீனிவாசன், மாவட்டப் பொரு ளாளர் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளிக்கு 60 வயதுக்கு முன்பே கணவர் இறந்தால் விதவை பெண்கள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆன்-லைன் பதிவை எளிமை யாக்க வேண்டும். கட்டுமான பணி பெண் தொழிலாளிக்கு 55 வயதில் மாத ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் நலவாரிய பயன்களை அதி கரிக்க வேண்டும், பெண் தொழிலாளி பிரசவ கால நிதியை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளிக்கு திருமண உதவித் தொகை 50 ஆயிரமும், தாலிக்கு தங்கமும் வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.