கடலூர், பிப். 16- ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநில துணை பொதுச் செயலாளர் டி.பழனிவேல் தலைமையில் மறியல் நடை பெற்றது. சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் பி.கருப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி கூடுதல் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலை மையில் நடைபெற்ற மறியலில் கோட்டத் தலைவர்கள் ஆர்.ஏழுமலை, கே.சரவணன், ஜி.ராஜேந்திரன், பி.பாண்டியன், ஆர்.சந்திராயர், ஆர்.பானுமதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், வட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திட்டச் செயலாளர் கருணா நிதி, பொருளாளர் முனிசாமி, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாதேசிங்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு மாநிலச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மின்வாரிய ஒய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் கு.தருமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியலில் சிஐடியு நிர்வாகிகள் பாரி, காங்கேயன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநில துணைத் தலைவர் கே .அம்பிகாபதி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.