districts

புயல் எச்சரிக்கை: கடலூரில் 191 தற்காலிக முகாம்கள்

கடலூர், டிச. 8- வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் சார்பில் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விடு முறை எடுக்காமல் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 42 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அரக் கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 28 பேர் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். மாவட்டத்தில் 274 இடங்கள் புயலால் பாதிக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும்  ஊராட்சி பகுதிகளில் மரம் அறுக்கும் கருவி, ஜெனரேட்டர், உணவு தயாரிப்பதற்கான பொருட்கள், பெட்ரோல், ஜேசிபி  வாகனம், மணல் முட்டைகள் உள்ளிட்ட மீட்பு பணி உபகர ணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களில் 191 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் கட்டிடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.