கடலூர், அக்.25- தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறி வித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதன் காரண மாக மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் சாரல்மழை பெய்தது. புதிய புயல் சின்னம் காரண மாக கடலூரில் செவ்வாயன்று (அக்.25) வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால் தோணித்துறை, துறைமுகம் உள்ளிட்ட பகுதி களில் கடல் சீற்றம் அதிகம் இருந்தது. ராட்சத அலைகள் மேலெழும்பி கரையை வந்து தொட்டபடி சென்றது. இத னால் கடற்கரையோரம் நிறுத்தப் பட்டிருந்த படகுகளை மீன வர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.