districts

img

வீடுகளை இடிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

கடலூர், அக். 12- குளம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ள மாநகராட்சி அதிகாரிகள் அத்துமீறியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் பின்வாங்கிச் சென்றனர். கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் இடத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு அருகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 20க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். இந்த இடம் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப் பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநக ராட்சி அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்று கின்றோம் என்ற போர்வை யில் இந்த வீடுகளை இடிப்பதற்கு கடந்த மூன்று மாதமாக பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சி ஆணை யர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனு அளித்தனர். மேலும் நீதி மன்றத்தின் மூலமும் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். இந்நிலையில் வீடுகளை அகற்ற வந்த பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரி கள் வந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் மாநகரச் செய லாளர் ஆர்.அமர்நாத், மாநகர குழு உறுப்பினர்கள் திருமுருகன், கருணாகரன், தமிழ்மணி, ஸ்டாலின், ஆனந்த், பழனி, செந்தமிழ், மணிவண்ணன், குடி யிருப்போர் நல சங்கத்தின் தலைவர் பி.வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பொக்லைன் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இடம் மாநக ராட்சிக்கு சொந்தமானது அல்ல என்றும், சிவசுப்பிர மணிய சாமி கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு மாநக ராட்சிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர், வட்டாட்சியர் பூபாலசந்திரனை வர வழைத்தனர். அவர் மாநக ராட்சி அதிகாரியிடம் எந்த ஒரு அளவிடும் செய்யாமல் எப்படி ஆக்கிரமிப்பை அகற்ற வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு எந்த பதிலும் கூறாமல் மாநகராட்சி அதி காரிகள் விழி பிதுங்கி நின்ற னர். பின்னர் வீடுகளை இடிப்பதை நிறுத்திவிட்டு குளத்தை தூர்வாரிக் கொள்கின்றோம் என்று கூறி விட்டு கிளம்பி சென்றனர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “குளம் இருந்ததற்கான எந்த ஆவணமும் வருவாய் துறை ஆவணங்களில் இல்லாத நிலையில், குளத்தை அளவீடு கூட செய்யாமல் அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக? வீடுகளை இடித்து தள்ளுவதற்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்று கின்றோம் என்ற போர்வை யில் மாநகராட்சி அதிகாரி கள் அத்துமீறி நடந்து கொண்டனர்”என்றனர்.