districts

img

நகராட்சி பள்ளியில்  துளிர் இல்லம் தொடக்கம்

கடலூர், ஜூன் 28- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் முதல் துளிர் இல்லம் புதுப்பாளையத்தில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் துவக்கபட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் துளிர் இல்லம் குறித்து விவரித்தார். மாவட்ட கருத்தாளர் எஸ்.பாலமுருகன் குழந்தைகளுக்கு "மந்திரமா? தந்திரமா?" என்பது குறித்து செயல் விளக்கமளித்தார்.  மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.அய்யனார் ‘ஆம்ஸ்டாரங் குழு’ என பெயர் சூட்டி வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திகேயன், துளிர் இல்லம் குழுவின் புதிய தலைவர் செல்வி சந்தான பிரியா, செயலாளர் அருண்குமார் ஆகியோரும் பேசினர். இத்துளிர் இல்லத்தில் 4 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.