districts

ஏடிஎம் -இல் கொள்ளை ஊழியர் கைது

கடலூர், மார்ச் 19- கடலூரில் ஏடிஎம் மையத்தில் ரூ.9 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக பணம் நிரப்பும் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.      விசாரணையில்,  மையத்தில், 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஏடிஎம்மில் பணம் நிரப்பும் 4 ஊழியர்கள் பணம் நிரப்பிய பின்னர் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் எவ்வித காட்சிகளும் பதிவாகாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரணை  நடத்தப்பட்டது. இதில், பணம் நிரப்பும் பகுதிக்கு இரண்டு சாவிகள் இருப்பதும், வெள்ளிக்கிழமையன்று ஒருவர் விடுப்பு எடுத்திருப்பதால் ஏடிஎம்மிற்கான சாவியை கடலூர் அருகிலுள்ள விஸ்நாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (26) என்பவரே வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தியதில், வியாழக்கிழமை பணம் நிரப்பும் போது கண்காணிப்பு காமிராவை நிறுத்தி வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏடிஎம் மையத்திற்குச் சென்று அங்கு தன்னிடம் இருந்த சாவியை பயன்படுத்தி அதில் இருந்த ரூ.9 லட்சத்து ஆயிரத்தை எடுத்துள்ளார். அப்போது, பதற்றத்தில் சில ரூபாய் நோட்டுகளை தவற விட்டதோடு, சாவியையும் அதிலேயே வைத்து விட்டு சென்றதும் தெரிய வந்தது. இதில், ரூ.6,97,400 தனது இருசக்கர வாகனத்திலேயே வைத்து சுற்றியுள்ளார். இதையடுத்தது காவல்துறையினர் வாகனத்துடன் சேர்ந்து பணத்தை கைப்பற்றினர். மீதி பணத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள  நடுவீரப்பட்டு ஏடிஎம் மையத்தில் வைத்திருப்பதாக அவர் கூறியதை அடுத்து அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.