districts

img

கடலூர் மாவட்டத்தில் மழை-வெள்ள பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் சிபிஎம் குழு வலியுறுத்தல்

கடலூர், டிச.5- கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவேண்டும் என்றும் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பபட்ட பகுதிகளை பார்வை யிட்ட பின்னர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ. சண்முகம் ஆகியோர் செய்தியாளர்க ளிடம்  கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் ஆற்று தண்ணீர் புகுந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரத்தையே புரட்டிப் போட்டு விட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிப்பதற்கு கூட இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். உணவு சமைப்பதற்கான ஏற்பாடு இல்லை.  ஆறு திசைமாறி பாய்ந்த காரணத்தால் வாழை, மணிலா, பருத்தி, கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள்  வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது,.

வயல்களில் மண் மேடிட்டு பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால் விவசாயிகள் மீள முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். விவ சாயிகளை மீட்கக் கூடிய வகையில் ஒன்றிய-மாநில அரசுகளின் நட வடிக்கை இருக்க வேண்டும். புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட, தென்பெண்ணையாற்று வெள்ள நீரால் தான் கடலூர், விழுப்பு ரம் மாவட்டங்களில் அதீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டி ருக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளையும் உயர மான கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என்று குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

இது நிரந்தரமான தீர்வாகவும், கடலூர் மக்களை பாதுகாக்க உதவும். முதல்வர் அறிவித்துள்ள  நிவா ரணத் தொகை எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது பொருத்த மானது கிடையாது. எனவே, இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவை கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது அதன்படி ரூ.36 ஆயிரம் ரூபாய் என்று தீர்மானித்து ள்ளது. முற்றிலும் அழிந்து போன பயிர்களுக்கு அத்தகைய இழப்பீடு தருவதற்கு பதிலாக வெறும் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் என்பது எந்த  வகையிலும்  விவசாயிகளை திருப்திப்படுத்தாது.  

முதலமைச்சரின் அறிவிப்பு மக்க ளிடையே கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இன்னும் முறையான கணக்கெடுப்பு தொடங்கப் படவில்லை. துல்லிய மான கணக்கெடுப்பு நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடும்பத்தை யும் கைவிடக்கூடாது.  விவசாயிகளை யும் விட்டு விடக்கூடாது. அனை வருக்கும் நிவாரணம் முழுமையாக சென்று சேருவதை அரசு உத்தர வாதப்படுத்த வேண்டும். இயற்கை, இடர்பாடுகள் என்றதும், பாஜக அல்லாத மாநில அரசுகளை ஒன்றிய பாஜக அரசு பாரபட்சமாக நடத்து வதும், பேரிடர் நிதி வழங்காமல் பழி வாங்குவதையும் கைவிடவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மாநிலத்தவராக இருந்தாலும் இந்திய மக்கள் என்ற வகையில் உதவுவது  ஒன்றிய அரசின் கடமை. பாரபட்சமாக நடப்பதையும், மாநில அரசுகளை பழிவாங்குவதையும் கண்டிக்கிறோம்.

தண்ணீர் புகுந்த வீட்டிற்கு ரூ.2 ஆயிரம் ஏற்புடையது அல்ல. குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து மின்னணு பொருட்களும் சேதமடைந்துள்ளன. இந்த பொருட்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றால் பல ஆண்டு கள் பிடிக்கும். தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு வட்டி இல்லாத கடனாக தலா ஒரு லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறைந்தபட்ச அடிப்படை தேவை களையாவது அவர்கள் செய்து கொள்ள முடியும். தண்ணீர் திறக்கும் போது அரசு அதிகாரிகள் முன் தயாரிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.  

இறந்த கால்நடைகளை காட்டி னால் தான் நிவாரணம் வழங்கப்படும் என்ற போக்கை மாற்றி உள்ளூர் விசா ரணை அடிப்படையில் கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். மக்களை மீட்பதற்கும், அவர்கள் மீள்வதற்கு அனைத்து விதமான உதவிகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். நுண்கடன் நிறுவனங்கள் அந்த பகுதிகளில் தவணைகளை இந்த காலத்தில் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.

கடலூர் நகரத்தில் 3 ஆயிரத்துக்கு 500க்கு மேற்பட்ட கைத்தறி விற்பனை உற்பத்தியாளர்கள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கும் நிவாரண வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இந்த பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், பி.கருப்பையன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் உடனிருந்தனர்.