districts

பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

கடலூர், நவ. 25- தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத் தின் (சிஐடியு) மாநில  பொதுக் குழு வலியுறுத்தி யுள்ளது.

இதில் மாநில துணைத்  தலைவர்கள் எஸ்.லூர்து சாமி, கே.சுப்புராஜ், மாநில துணை பொதுசெயலாளர் ஆர்.மோகன், மாநில செய லாளர்கள் பி.ஜெயராமன், கே.ராஜாங்கம், என்.ராசப் பன், கே.கதிரேச பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் ஆர்.சண்முகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் எம்.ஏழுமலை  வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர்.

சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் ஆகியோர் பேசினர். மண்டல செயலா ளர் சுதர்சன் பாபு நன்றி கூறினார்.

நுகர்பொருள் வாணிப கழகத்தில் மாநிலம் முழு வதும் உள்ள நூற்றுக் கணக்கான காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். உயர்பதவிகளில் அயல்துறை அதிகாரிகளை உடனடியாக விடுவித்து, கழக அலுவலர்களை மேற்கண்ட பணியிடங்களில் பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பருவகால ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், அந்தந்த மாதங்களின் கடைசி தேதியில் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் செய்யும் மண்டலங்களில் கொள் முதல் செய்த நெல் மூட்டை களை 48 மணி நேரத்திற் குள் இயக்கம் செய்ய வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், டிஎன்சிஎஸ்சி நடத்தும் ரேஷன் கடை களை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், பருவ கால பணியாளர்களின் பணி நிரந்தரத்தை உடனடி யாக அமல்படுத்த வேண் டும், கணினி பிரிவு ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்