districts

img

4 மாதமாக ஓய்வூதியம் நிறுத்தம்: கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

கடலூர், அக். 14- கடந்த 4 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூ தியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுநகர் செல்லங் குப்பம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மாவட்ட இணைச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் தயாளன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். பின்னர் துணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஓய்வூதியத்தை வழங்க உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.